Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Friday, August 3, 2012

பள்ளிக்கூட வாசலை மிதிக்காமலேயே கற்றுக்கொள்ளமுடியும்......




இந்தியா முழுவதிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியின் தரம், பள்ளிகளின் நிலை, வசதி, மாணவர் சேர்க்கை போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன. இத்தகைய "கல்விக் கணக்கெடுப்பு ஆண்டறிக்கை - 2011' அண்மையில் வெளியிடப்பட்டது. 


 இந்த அறிக்கையில் தமிழ்நாடு மகிழ்ச்சி கொள்ள இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவதாக, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வது 100 விழுக்காடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர், ஆசிரியர் பள்ளி வருகையும் 90 விழுக்காடுக்கு அதிகமாக உள்ளது. இது ஓர் ஆரோக்கியமான சூழல்.

 அதேவேளையில், அரசும் பெற்றோரும் கவலைகொள்ளக்கூடிய இரண்டு விஷயங்களும் உள்ளன. முதலாவதாக, 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 32 விழுக்காடு மாணவர்களுக்குத்தான் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்துள்ளது. இது 8-ம் வகுப்பில் சற்றே உயர்ந்து 66 விழுக்காடு மாணவர்கள் எளிய தமிழைப் படிக்க இயலுவோராக இருக்கின்றனர்.


 இரண்டாவதாக, 5-ம் வகுப்பில் 45 விழுக்காடு மாணவர்களால் கழித்தல் கணக்கு மட்டுமே செய்ய முடியும். 14 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே கழித்தல், வகுத்தல் இரண்டையும் செய்ய இயலுகிறது. எட்டாம் வகுப்பில் இந்த நிலை மாறுகிறது. கழித்தல் மட்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 38 விழுக்காடாகவும், கழித்தல், வகுத்தல் இரண்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 45 விழுக்காடாகவும் உயருகிறது.


 இந்த ஆய்வு ஏதோ அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் கருதிவிட வேண்டியதில்லை. தனியார் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் இந்த ஆய்வு. தனியார் பள்ளிகளில் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தால், சிறப்பாகக் கல்வி பயில வாய்ப்பு ஏற்படும் என்கிற எண்ணத்தில்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், அங்கும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.



 ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் 2-ம் வகுப்பு தமிழ்ப்பாட நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னபோது, அரசுப் பள்ளி மாணவர்களில் 68 விழுக்காடு மாணவர்கள் திணறினார்கள் என்றால், தனியார் பள்ளிகளில் கொஞ்சம் குறைவு- அதாவது 66 விழுக்காடு!


 8-ம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களில் 15 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றனர் என்றால், தனியார் பள்ளி மாணவர்கள் 25 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றார்கள். தனியார் பள்ளியில் படித்தாலும் நான்கில் ஒருவர் ட்யூஷன் படித்துதான் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்றால், தனியார் பள்ளிகளுக்கு கொட்டி அழுது கண்ட பலன் என்ன என்பது பெற்றோர் சிந்திக்க வேண்டிய விஷயம்.


 இந்த ஆய்வில் கிடைக்கும் இன்னொரு தகவல், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் 92 விழுக்காட்டினரின் வீட்டு மொழி, தமிழ் மொழியாக இருக்கின்றது. அப்படி இருந்தும், இவர்களால் தமிழைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், கற்பித்தல் முறையில்தான் தவறு இருக்கிறது என்பது உறுதியாகின்றது.


 ஆங்கில மொழியில் கிராமப்புறப் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதாலும், தனியார் பள்ளிகளில்தான் ஆங்கில அறிவு சிறப்பாகக் கிடைக்கும் என்பதாலும்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், தாய்மொழியான தமிழையே இந்தத் தனியார் பள்ளி மாணவர்களால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை என்றால், இவர்களால் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவும், படிக்கவும் எழுதவும் எவ்வாறு முடியும்?


 ஒரு மாணவன் பள்ளிக்கூட வாசலை மிதிக்காமலேயே கற்றுக்கொள்ளக்கூடிய, மிக இயல்பான கற்றல் சூழல் இப்போது இருக்கின்றது. இன்றைய தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடே கிடையாது என்ற நிலைமை உள்ளது. தொலைக்காட்சியில் இடம்பெறும் பெயர்கள், டிவி விளம்பரங்களைக் குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்க முடியும். ஊர் முழுவதும் சுவரொட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. கடைகளின் விளம்பரங்கள் இரவு நேரத்தில்கூட தமிழிலும் ஆங்கிலத்திலும் மின்னுகின்றன. இதில் நகரம், கிராமம் என்ற எல்லைக்கோடுகள் மறைந்து வருகின்றன. பிறகும் ஏன் மாணவர்களால் எளிய தமிழைப் படிக்கவும், சிறிய கணக்குகளைப் பிழையின்றி கணிக்கவும் முடியவில்லை?


 இந்த ஆய்வு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 26,000 மாணவர்களிடம் நடத்தப்பட்டது என்றாலும், "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிற அளவில் இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, மதிப்பீடு என்கின்ற வகையில் தமிழக அரசு மிகத் தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும்.


 பள்ளி வாராக் குழந்தைகள் இல்லை என்ற நிலையை எட்டி விட்டோம். ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவதும்கூட நன்றாக இருக்கின்றது. ஆனால், கற்றல் மட்டும் இல்லை. கல்வி தரமானதாக இல்லை என்றால், அதற்கு ஒரே காரணம் கல்வித்துறையின் கற்பித்தல் முறைதான் என்பது வெளிப்படை.
 நமது கல்வி முறையில் இருக்கும் அடிப்படைக் குறைபாடு, ஆசிரியர்கள் மத்தியில் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமை. அரை நூற்றாண்டுக்கு முன்னால் அரை வயிற்றுக் கஞ்சியுடன் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வு இன்று அரசு ஊழியர்களாக ஊதியம் பெறும் ஆசிரியர்களிடம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஆசிரியர் பணியை சேவையாகக் கருதாமல் ஒரு தொழிலாகக் கருதுவதுதான். மேலும், சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த உன்னதமான இடமும் மரியாதையும் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.


 கல்வித் துறையில் அரசியல் தலையீடு, பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கல்வி என்கிற பெற்றோரின் தவறான அணுகுமுறை, ஆசிரியர்களின் தரம், ஆசிரியர்கள்மீது சமுதாயத்தில், குறிப்பாக, பெற்றோரிடத்தில் காணப்படும் மரியாதையின்மை போன்றவைதான் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


 காரணங்கள் தெரிகிறது. அந்தத் தவறுகளைத் திருத்திக் கல்வி முறையை மேம்படுத்தும் எண்ணம் இல்லை என்றால் அது யார் தவறு? நாளைய தலைமுறையைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருப்பது நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருப்பது என்பதை மறந்துவிட வேண்டாம்! 

Thursday, August 2, 2012

15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடக்கறதே பெரிய விஷயம்: அஜித்!

என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜித். சமீபத்தில் அவர் பிரபல வார பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்...
நான் 'மங்காத்தா'வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட

்டேன். அது 'பில்லா-2'-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!
மனதை பாதித்த விமர்சனம்...
படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமெண்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.
நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!
நெகடிவ் விமர்சனங்கள் குறித்து...
என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜித்குமாராப் பொறக்கணும்னு. அஜித்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜித்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்.
கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!
ரசிகர்களுக்கு...
இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டே இருப்பது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்காதீங்க. உங்க தன்மானத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதீங்க.
உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!

தமிழ்நாட்டில் எப்படி கிறிஸ்தவமதம் மாற்றுகிறார்கள்?

நமது தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் எப்படியெல்லாம் மதம் மாற்றுகிறார்கள்:நேரில் உணர்ந்தவை
ஒரு கிராமம் அல்லது ஒரு லட்சம்பேர்கள் உள்ள நகரில் ஒரு பகுதி;ஒரே ஜாதிமக்கள் வாழும் பகுதியில் வெகுதூரத்தில் உள்ள மாநகரத்திலிருந்து ஒரு பாதிரியார் தனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறுகிறார்.தினமும் தனது வாடகை வீட்டில் ஏசுநாதரைப்பற்றி ஒரு மணிநேரம் வீதம் காலை மற்றும் மாலையில் பாடுகிறார்.
பாட்டுச்சப்தத்தால் அருகில் உள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் வேடிக்கைபார்க்க வருகின்றனர்.சில வாரங்களில் தனது இனிமையான சுபாவத்தால் எல்லா சிறுவர் சிறுமிகளுக்கும் தினமும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி அவர்களது வீடுகளுடன் தொடர்புகொள்கிறார்.
சில மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்தின் குடும்பரகசியங்களும் அந்த பாதிரிக்கு தெரியவருகிறது.பெரும்பாலும் பணக்கஷ்டம் தான்.
எல்லோருக்கும் பணம் கடன் தருகிறார்.(அட நம்மளும் வாங்கலாமே!)வட்டியை நம்மால் சில மாதங்களே ஒழுங்காக தர முடிகிறது.அடுத்த சில மாதங்கள் தர முடிவதில்லை.ஒரு வருடம் முடியும்நிலையில் திடீரென அதே பாதிரி,”நான் கொடுத்த பணத்தை இந்த தேதிக்குள் நீ தர வேண்டும்.இல்லாவிட்டால் கிறிஸ்தவத்திற்கு மாறு.நீ ஒரு பைசா கூட கடன் தர வேண்டாம்”.ஆனால், குழந்தைகளுக்கு வழக்கம் போல இனிப்புகள் மற்றும் உணவுகள் தருவது தொடர்கின்றது.குழந்தைகள் நமது தெய்வங்களை பிசாசுகள் என சபிக்குமளவிற்கு மாறிவிடுகின்றன.ஏசுவை தனதுஆழ்மனதில் பதித்துவிடுகின்றன.
2.இளம்பாதிரிகள் திட்டம் என்ற திட்டத்தின்படி, பிளஸ் டூ முடிக்கும் கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இந்தியா முழுவதும் கிறிஸ்தவமயமாக வேண்டும் என வெறியூட்டப்படுகிறது.அவர்கள் கல்லூரியில் சேர்ந்த உடனே உடன்படிக்கும் இந்து மாணவியைக் காதலிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.அவளை மயக்கி திருமணம் செய்யுமளவிற்கு கிறிஸ்தவ இளைஞர்கள் தூண்டப்படுகின்றனர்.பெண்வீட்டில் பெண்ணை தலைமுழுகிவிடுகின்றனர்.மணம் செய்வதற்காக அந்த கல்லூரி மாணவியை கிறிஸ்துவ மதம் மாறும்படி கிறிஸ்தவக்காதலனே வற்புறுத்துகிறான்.சரி! நம் காதலனுக்காக இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி? என அப்பெண் கிறிஸ்தவப்பெண்ணாக மதம் மாறினாலும்,திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படி முடித்துவிட்டு அவளை கர்ப்பிணியாக்கிவிட்டு, எங்காவது அந்த கிறிஸ்தவ மாணவன் ஓடிவிடுகிறான்.ஆதாரம்:குமுதம் ஜோதிடம் வார இதழ்கள் 2005,2006,2007,2008,2009 முழுவதும்.
3.எங்கெல்லாம் தி.மு.க., கம்யூனிஸ்டு,காங்கிரஸ் வலுவாக உள்ளதோ அங்கே கிறிஸ்தவப்பாதிரிகளுக்கு கொண்டாட்டம்தான்.ஏனேனில்,அங்கே பி.ஜே.பி.,இந்து முன்னணி பெயருக்குத்தான் உள்ளது.நாகாலந்து மாநிலம் மற்றும் இந்தியா முழுக்க வாழும் ஆதிவாசி மற்றும் பழங்குடி மக்களிடம் கிறிஸ்தவ சகோதரிகள் படுதீவிரமாக மதம் மாற்றுகிறார்கள்.அப்பாவி பழங்குடிமக்களிடம் காய்ச்சல் வந்தால் குரோசின் மத்திரையை வென்னீரில் கலந்து குடிக்கச்சொல்லுகிறார்கள்.ஒரே நாளில் குணமாகிவிட்ட பழங்குடி நோயாளிகளிடம் ஏசுநாதர்தான் குணப்படுத்தினார் என பொய் சொல்லி அவர்களை மதம் மாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.
4.ஒவ்வொரு டிசம்பர் 31 இரவும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என ஒரு பெரிய மைதானத்தில் கிறிஸ்தவர்கள் நிகழ்ச்சி வைக்கிறார்கள்.எல்லா கிறிஸ்தவ இளைஞர்களுக்கும் தனது இந்து மற்றும் இஸ்லாமிய வகுப்புத்தோழர்களை அழைத்துவரும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
வரும் இந்து மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் அந்த புத்தாண்டுக்கொண்டாட்டத்தில் ஏதாவது ஒரு இளம் பெண்ணுடன் நடனமாட வேண்டும்.ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போமே அதே மாதிரி ஆளுக்கு ஒரு ஜோடி.. எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம் ஹேப்பி நீயூ இயர் என்ற இரைச்சல்
இதெல்லாம் ஏசுநாதருக்குத் தெரிந்தால் அவர் எத்தனை கோடிதடவை தற்கொலை செய்து கொள்வாரோ?குறிப்பு: இவையெல்லாம் சில உதாரணங்கள் தான்.சில உதாரணங்கள் இங்கே எழுத முடியாத அளவிற்கு கூச்சமான காரியங்களைக்கொண்டும் கிறிஸ்தவ மதமாற்றம் இந்தியா முழுக்கவும் தமிழ்நாட்டிலும் எல்லா இன் ஜினியரிங் மற்றும் தனியார்கல்லூரிகளிலும் நடைபெறுகிறது.