Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, May 28, 2012

உலகத்தை முட்டாள் ஆக்கும் அமெரிக்கா ,,,,,,விக்கி

உலகத்தை முட்டாள் ஆக்கும் அமெரிக்கா ,,,,,,,,?

நான் நாசா ஆய்வுமைய வீடியோ   அனைத்தையும் பார்க்கும் 
போது என் முட்டாள் சிந்தனை ,,,,,?
 

இதற்க்கு யார் பதில் தர போகிறிர்கள் ,,,,?

1955 ஆம் ஆண்டில் நாங்கள் நிலவில் கால் வைத்துவிட்டோம் என்று சொல்லும் அமெரிக்கா ஏன் இன்றைக்கு நிலவில் ஆராய்ச்சிகளை 
செய்ய ஆர்வம் காட்டவில்லை

சரி .....

நங்கள் நிலவில் மனிதனை அணிப்பினோம் ,,நாயை அணிப்பினோம்,,,என்று பொய் சொல்லும் அமெரிக்கா,,,?
 
இன்று மனிதனை ஏன் அனுப்பவில்லை ....

சரி

அப்போ அதற்க்கான முயற்சிகளை செய்யாமல் அமைதியாக இருக்கக்காரணம் ....?

சரியான விஞ்சானிகள் இல்லை என்று சொல்ல முடியவில்லையா ,,,,

ஆம் உண்மை இது தான் ,,,,உலக அரங்கில் ஏவுகணை தொழில்நுட்பத்தில் முன்னிலை வகித்த நாடு ஜெர்மனி....

அதை இங்கு சொல்ல காரணம் இருக்கு 

 ஏவுகணை தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியவர் ஹிட்லர்

இது எத்தனை பேருக்கு தெரியும் ,,,

ஆம் முதல் ராகெட் ஆப்பிள் முதல் நவீன செயற்கைகோள்களை அனுப்பி இன்றுவரை உண்மையை வெளியில் சொல்ல முடியாமல் சிரித்து கொண்டு மற்ற நாடுகளை ஏமாற்றி வருகிறது ,,,,அமெரிக்கா 

இப்போ சொல்ல போரது யோசிக்க வேண்டிய விஷயம் ,,,,,

பூமியை தவிர மேல உலகம் இருக்கிறதா,,,,,அப்படி என்றால் நிலவில் எப்படி நிற்க முடிந்தது

சரி அப்படி நின்று கொண்டு குதிக்கும் போது தூசி,,,துகள்கள் மேல் எழும்பவில்லை 

சரி ஒரு விமானம் தரை இறங்கும் போது ஏற்படும் மாற்றம் ஏன் ராக்கெட் இறங்கும் போது ஏற்ப்படவில்லை ....

ராக்கெட் கட்டுப்பாடு சரியாக இருக்குமா....இல்லை விமானம் ஓட்டும் விமானி தவறாக இறக்குகிறாரா,,,,

அப்போ இறங்கும் போது ஏன் ஒரு தூசி எழும்பவில்லை ,,,,

அதை பற்றி நாசா இதுவரை ஏன் சொல்லவில்லை ......

புவீ ஈர்ப்பு விசை உள்ளதா ,,,,அப்போ எப்படி நாசா வெளயிட்ட வீடியோ_வில் குதிக்கும் மாதிரி வீரர்கள் உள்ளனர் .....

சரி பூமியை தவிர "காற்று "நிலவில் இருக்கிறதா அப்போ எப்படி நிலாவில் அவர்கள் நாட்டு கொடியை ஏற்ற முடிந்தது .....சரி அந்த கொடி எப்படி பறந்தது ,,,,,

நிற்க சக்தி இல்லாத இடத்தில் கொடி எப்படி நட முடிந்தது ,,,,,


மக்களை ஏமாற்றும் இந்த நிலைமை இன்னும் தேவையா ,,,,

இவ்ளோ ராக்கெட் இருக்கும் போது இன்றுவரை ஏற்ப்படும் இயற்க்கை சீற்றங்களை தடுக்க முடியவில்லை ,,,,ஏன் ....

ராக்கெட் மேல சுற்றி கொண்டு தான் இருக்கிறதா .....?

உலகத்தமிழர் நெட்வொர்க் .............(விக்னேஷ்)

Sunday, May 27, 2012

தமிழ் மாணவர்களின் தற்கொலைகளை கொச்சைபடுத்திய அண்ணா பல்கலைகழகம்




என் கேள்வி ;;(1)தமிழகத்தில் அதிகம் தமிழ் படிக்கும் 12 மாணவர்கள் அதிகம்,,,அனால் கல்வி நிலையங்களில் மேற்படிப்புக்கு தமிழ் பாடங்களை கொண்டுவராதது ஏன் ,,,,,
                               
(2)தமிழ் மொழிநமது தாய்மொழி ,,நம் மொழயில் யோசிக்கும் போது உச்சகட்ட சிந்தனை வெளிப்படும் ,,,,(எ.க) ஜப்பான்,,சீனா,,,பிரெஞ்சு வளர்ந்த நாடுகளில் இன்றும் அவர்களின் மொழிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது அனால் இங்கு நிலை என்ன ,,,,?
                               
(3)இவ்ளோ அரசு கல்விநிலையங்கள் இருக்கும் போது தமிழ்நாட்டில் இன்றும் தனியார் பள்ளி மாணவர்கள் முதலிடம் வரும்போது நம் அரசு பள்ளி மாணவர்கள் நிலை என்ன ,,,,,,,ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் தவறா ,,,,,?
                             
(4)நமது மொழி ஹிந்தி என சொல்லும் போது அந்த  மொழியை நமக்கு கொடுக்காதது யார் தவறு ,,,, எந்த ஒரு அரசியல்வாதிகள் பிள்ளைகள் வேற்றுமொழி படிப்பது இல்லையா ,,,,,,?
                             
 (5) லேப்டாப் கொடுக்கும் என சொல்லும் அரசு மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறதா ,,,,,,?
                               
(6)அனைத்து அரசு உழியர்கள் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்படுமா ,,,,,? அப்போ அரசு பள்ளிகளில் ஆசிரியருக்கு கொடுக்கும் சம்பளம் ஏன் அதிகம் ,,,,,,?
                               
(7)இன்ஜினியரிங் துறையில் இறுதி ஆண்டு மாணவர்கள் (project)துறை சார்ந்த வடிவமைப்பிற்கு தமிழ்மொழியில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் அதற்க்கு அரசு முயலுமா (எ,க)சொந்தமாக வடிவமைத்தால் மட்டுமே அவர்களுக்கு இன்ஜினியரிங் பட்டம் தர அரசு முயலுமா ,,,,,
                             
 (8)இவ்ளோ பட்டம் பெற்ற இன்ஜினியர்கள் எங்க எங்க போனார்கள் ,,,,,?

பல குறைகள் இருக்கும் போது நாங்கள் ஆடு தருகிறோம் மாடு தருகிறோம்சொல்வது எதற்கு

அதை விட univercity என்ற சொல்லிக்கொண்டு மார்தட்டும் கல்விநிலையங்கள் இருக்கும் போது மாணவர்களின் குறைகளை கண்டறியாதது யார் தவறு ,,,,,,?

அப்துல்கலாம் அரசு பள்ளயில் படித்தார் பெரிய விஞ்சானி ஆனார் என்றும் சொல்லும்,,,, நாம் ,,,,ஏன் அரசு பள்ளிகளில் குழந்தையை படிக்கவைப்பதில்லை ,,,,,?




இதற்க்கு என்ன தீர்வு ,,,,,,?இன்றைய மாணவர்களின் ஒற்றுமை இல்லாதது காரணம் (எ.க)முனுசாமி ,,ராமசாமி மகன் IIT போன்ற கல்விநிலையங்களில் செரமுடியதது ஏன் ,,,,,,,?


சரியான கல்விமுறை இல்லாதது தான் காரணம் ,,,,,,?


(உலகத்தமிழர் ·நெட்வொர்க் கருத்துக்கணிப்பு )


தமிழகத்தின் நம்பர் ஒன் கல்வி நிலையம் என்று பெருமைப்படக்கூடிய அண்ணா பல்கலைக்கழகத்தில்,  கிராமபுற வரும்  மாணவர்களின் தொடர் தற்கொலைகளும், தற்கொலைகளின் காரணம் கண்டுபிடிக்காமல் மாணவர்களின் சாவை கொச்சைபடுத்தும் போக்கை தொடர்ந்து செய்கிறது காவல்துறையும்,அண்ணா பல்கலைகழகமும்..



இந்த பல்கலைக்கழகத்தில் படித்த மணிவண்ணன் என்கிற மாணவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட  அதிர்ச்சியிலிருந்த நமக்கு அடுத்த சில நாட்களில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த மடப்பட்டுக்கு அருகேயுள்ள  கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தைரியலட்சுமி தற்கொலைசெய்துகொண்டார் எனும் தகவல் கிடைத்த நிலையில் தைரியலெட்சுமி, மணிவண்ணன் ஆகியோரின் வாழ்க்கைஅ பார்ப்பதற்கு முன்னால் ..! அண்ணா பல்கலைகழகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் செத்தபிறகு கொச்சைபடுத்தபட்டதை பார்ப்போம்..

நாமக்கல் மாவட்டத்திலுள்ள முள்ளுக்குறிச்சியை சேர்ந்த  ஜோதி (வயது 18).. 10-ம் வகுப்பு தேர்வில் 475 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1105 மதிப்பெண்கள் பெற்று  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி இ.சி.இ. படித்து வந்தவர். கடந்த 2010 செப்டம்பர் மாதம்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்போதைய பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள், எல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது... ஆனால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் ஜோதி தனது அண்ணன் தீபக்கிடம், தன்னை மாணவர்கள் கேலி கிண்டல் செய்து மிரட்டுகிறார்கள் அதனால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை, இனி சென்னைக்கு படிக்க செல்லமாட்டேன் என்று கூறி கதறி அழுதுள்ளார். அப்போது  தீபக் சொன்ன வார்த்தைகளில் ஆறுதல் அடையாமல் அவசரப்பட்டு தூக்கில் தொங்கிவிட,ஜோதியின் மரணத்திற்கு காவல்துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் சொன்ன காரணம் கேவலமானது .

ஜோதி மரணம் நிகழ்ந்த  அன்று எவ்வித விசாரணை நடத்தாமலேயேதுணைவேந்தர் மன்னர்ஜவகர்பல்கலைகழகத்தில் ராகிங் நடக்கவேயில்லை என்றதும், அப்போதைய மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி.சிவனாண்டி,ஜோதியின் செல்போனிலிருந்து, சக மாணவருக்கு, உன்னை ஏற்றுக்கொள்வதாக, எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், அதை அந்த மாணவன் சக நண்பர்களிடம் சொல்லிவி, சகமாணவர்கள்  கேலி செய்யும்போது, ஜோதி தனது செல்போன் ஹாஸ்டலில் இருப்பதாக கூறியிருக்கிறார் ஆனாலும் எஸ்.எம்.எஸ் மேட்டர்வெளியே தெரிந்துவிட்டதால் ஜோதி தற்கொலை செய்து கொண்டதாக சிவணாண்டிபத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஆனால் கல்லூரி வகுப்பில் இருக்கும் ஜோதி, ஹாஸ்டலில் இருக்கும் செல்போனில்எப்படி எஸ்.எம்.எஸ்.அனுப்பி இருக்க முடியும்அப்படியானால் அவரின் செல்போனிலிருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பியது யார்ராகிங் கொடுமையால் மற்ற மாணவர்கள் ஜோதியின் செல்போனை எடுத்து எஸ்.எம்.எஸ். ஏன் அனுப்பி இருக்க கூடாதுஇதுபோன்று, எவ்வித விசாரணையும் நடத்தாமல் ஒரே நாளில் இறந்து போன ஜோதி இனி உயிருடன் வர மாட்டார் என்ற தைரியத்தில், ஜோதி  காதலால் தற்கொலை செய்துகொண்டார் என பைலை மூடிவிட்டனர்.

ஜோதியின் தற்கொலையை மனதில் வைத்துகொண்டு, தைரிய லட்சுமி, மணிவண்னன்  தற்கொலைக்கொலைகளை படியுங்கள்…

பலரின் வாழ்க்கையை காப்பாற்றிய மாணவன் மணிவண்ணன் தற்கொலை:


கடந்த 2000-ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த அபூர்வாகுழந்தைத் தொழிலாளிகளை மீட்டெடுக்கும் போதுமணிவண்ணனையும் மீட்டுப் பள்ளியில் சேர்த்துவிட்டார். பொ.மல்லாபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு சேர்ந்த மணிவண்ணன் நன்றாகப் படிக்கத் தொடங்கினார். வறுமை விரட்டிக்கொண்டே இருந்தாலும்,10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 461 மதிப்பெண்களும் 2 தேர்வில் 1,159 மதிப்பெண்களும் எடுத்தார்.                                                         

குழந்தைத் தொழிலாளியாக இருந்த என்னை மீட்டெடுத்த அபூர்வா கலெக்டரைப் போலவேநானும் ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும்’ என்று  அரசு மற்றும் பல தனியார்களிடம் கல்வி உதவித் தொகை பெற்றுஅண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் பிரிவில் சேர்ந்தார். தனக்கு வரும் கல்வி உதவித் தொகையைக் கொண்டுசேலத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்த கனிஷ்கா,சக்திவேல்சிவகுமார் மூவரையும் தத்து எடுத்துப் படிக்க வைத்திருக்கிறார். வறுமை காரணமாக யாரும் படிக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகள் செய்துவந்த மணிவண்ணன்தான்கடந்த 27-ம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்பதுதான் பரிதாபமாக இருக்கிறது.


'அபூர்வா செந்தமிழன்’ என்ற புனைப்பெயரில் 'தாய்ப்பால் வாசம்’ என்ற கவிதைத் தொகுப்பை ஏப்ரல் 4-ம் தேதி வெளியிட இருந்தவர்.. 'கருவறை விதைகள்’ என்ற அமைப்பின் மூலம் ரத்ததானம்கண்தானம் குறித்து கல்லூரியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியவர் மணிவண்ணன். யாருக்கு எப்போது ரத்தம் தேவைப்பட்டாலும்...   தகவல் தெரிந்தால் உடனே ஓடிச்சென்று உதவுவார். தன்னுடன் படிக்கும்  கல்லூரி மாணவர்கள் கட்டணம் செலுத்தக் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, 'சிறு துளிகள்என்ற அமைப்பை ஏற்படுத்திகல்லூரி வளாகத்தில் உண்டியல் ஏந்தினார். மூன்று மாதங்களில் 85 ஆயிரம் ரூபாய் சேகரித்து 14 மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைத்தார்.

படிப்பது இன்ஜினீயரிங் என்றாலும் மணிவண்ணன் முழுக்கமுழுக்க தமிழ் மாணவனாகத்தான் இருந்தவருக்கு, ஆங்கிலம் தடுமாற்றத்தைத் தறவே, இன்ஜினீயரிங் பாடம் படிக்க விருப்பம் இல்லாமல் இருந்த மணிவண்ணன் 26 பேப்பர்கள் அரியர்ஸ் வைத்திருந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக சொல்கிறார்கள்..

ஜோதியை போல் சாவுக்கு பின் கொச்சைபடுத்தப்படும் தைரிய லெட்சுமி:

                                               


தைரிய லெட்சுமியின் அம்மா உமா சில வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட,  மூன்று பெண்பிள்ளைகளையும் கூலி வேலை செய்து காப்பாற்றி வருகிறார் அப்பா சக்திவேல்,குடும்ப கஸ்டத்தை உணர்ந்த லெட்சுமி,10-ம் வகுப்பில் 465மதிப்பெண்களும், 2 தேர்வில் 1012மதிப்பெண்கள் பெற்று அண்ணா பல்கலைக் கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்துள்ளார். இரண்டு செமஸ்டர்கள் கூட முடியாத நிலையில்  சுத்துப்பட்டு கிராமத்துலயே அண்ணா யூனிவர்சிட்டியில படிக்கிற ஒரே பொண்ணு, லெட்சுமியை முன்னுதாரணமா காட்டி ஊர்க் குழந்தைகளைப் படிக்கச் சொல்லும் ஊர்காரர்களுக்கு தைரிய லெட்சுமி தூக்கில் தொங்கி விட்டார் என்பது பேரதிர்ச்சிதான்.


''சிவில்மெக்கானிக்கல் இரண்டையும் தமிழ்வழிக் கல்வியில் கொண்டுவந்துவிட்டாலும் புத்தகங்கள் சரியான மொழியாக்கத்தில் இல்லை. மிகக்கடினமான மொழி நடையிலும்நிறைய வார்த்தைகள் தமிழ்ப்படுத்தாமல் ஆங்கிலத்தில் இருந்த நிலையில், தமிழ் அல்லது இரண்டும் கலந்து பரிட்சை எழுதலாம்னு சொல்றாங்க. ஒரு சிலர் தூய தமிழில்தான் எழுதணும்னு சொல்றாங்க.மாணவர்கள் குழம்பி கிடக்கிறார்கள் இதில்தான் தைரியலட்சுமி தோற்றுப்போனாள்''.

ஜோதியின் சாவை போல தைரிய லெட்சுமியின் சாவையும் கொச்சைபடுத்த நினைத்த நிர்வாகம் மீண்டும் ஓர் வதந்தியை பரப்பியிள்ளது..

ஏழ்மையில் கல்லூரிக்கு வந்த மணிவண்ணனின் குடும்பசூழலும், தைரியலட்சுமியின் குடும்பச்சூழலும் ஒத்துபோக இருவரும் அண்ணன் தங்கையாக பழகினார்கள். மணிவண்ணனின்  'தாய்ப்பால் வாசம்’ கவிதைத் தொகுப்புக்குப் பிழை திருத்திய தைரியலட்சுமியையும், மணிவன்னன் தற்கொலைக்கு காதல் தான் காரணமென கொச்சைப்படுத்துகிறது...


கிராமப்புறங்களில் நன்கு படித்து, நகரங்களிலுள்ள கல்லூரிகளுக்கு படிக்கச் செல்லும், மாணவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சனைகளை களைய அரசு கவனம் செலுத்த வேண்டும். அதுபோலவே ஜோதி, மணிவண்ணன், தைரியபிரியா ஆகிய மரணத்திற்கான காரணங்களை கண்டறிய, விருப்பு வெறுப்பில்லாமல் முழுமையான விசாரணை மேற்கொண்டு மாணவ-மாணவியர் தற்கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

லேப்டாப்புகளை வழங்குவதிலேயே கவனம் செலுத்தும் தமிழக அரசு, என்ன செய்ய போகிறது பார்ப்போம்............

உலகத்தமிழர் நெட்வொர்க்,,,,,,,,,,,,,,,,, விக்னேஷ் 

பிளஸ்2 பரீட்சையில் சாதனை படைத்த பேரறிவாளன், முருகன் இருவரும் சிறையையும் ஜெயிப்பார்கள்!


வாழ்க்கை ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியோருக்கு பிளஸ்2 பரீட்சை ரிசல்ட் வந்து விட்டது. சிறைத்துறை வரலாற்றில் முதன்மையான மதிப்பெண் வாங்கி இதிலும் கவனிப்பைப் பெற்று விட்டார். 
வேலூர் மத்தியச் சிறையை, பேரறிவாளனும் முருகனும் சேர்ந்து ஒரு கல்விக்​கூடமாக மாற்றி விட்டார்கள்’ என்​கிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 21 வருடங்​களாகச் சிறை​யில் அடைபட்டு, தூக்குத் தண்டனையை எதிர்​நோக்கி இருப்ப​வர்கள் இவர்கள். ஆனாலும், மனம் தளராமல், சிறையிலேயே படித்து ப்ளஸ் டூ தேர்வு எழுதினார்கள். பேரறிவாளன் 1,096 மதிப்பெண்களும், முருகன் 983 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளிடம் பேசினோம்.
படிப்பின் மேல் அத்தனை ஆர்வம் கொண்டவன் என் மகன் பேரறிவாளன். 12-ம் வகுப்புத் தேர்வு எழுத முடியவில்லை என்ற ஏக்கம் அவனிடம் நீண்ட காலமாகவே இருந்தது. அது இப்போது நிறைவேறி விட்டது. ஜோலார்பேட்டையில் 10-ம் வகுப்பு முடித் தான். அப்போது, பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்தான். பிறகு, கிருஷ்ணகிரியில் அரசு பாலிடெக்னிக்கில் சேர்ந்து டிரிபிள்-இ முடித்தான். அதிலும் 85 சதவிகிதத்துக்கும் மேல் வாங்கினான். அதன் பிறகுதான் கொலை வழக்கில் கைதாகி சிறைக்குப் போனான். ஆனாலும் நாங்கள் ஒவ்வொரு முறை பார்க்கச் செல்லும்போதும் பகுத்தறிவு, பொது அறிவு தொடர்பான புத்தகங்களை வாங்கிவரச் சொல்வான்.
சிறையில் இருந்தவாறே பேரறிவாளன் பி.சி.ஏ. முடித்து பிறகு எம்.சி.ஏ. முடித்தான். தட்டச்சுப் பயிற்சியையும் சிறையில் இருந்தவாறே முடித்துள்ளான். எம்.பில் படிக்க வேண்டும் என்பது பேரறிவாளனின் கனவுகளில் ஒன்று. எம்.பில். படிப்பதற்கு 12-ம் வகுப்புச் சான்றிதழ் அவசியம் என்று கூறினார்கள். அதனால்தான் இந்த வருடம் 2 தேர்வு எழுதினான். இவனைப் பார்த்து முருகனுக்கும் படிப்பு ஆர்வம் ஏற்பட்டு விட்டது.
கடந்த 2011-ம் வருடம் தேர்வு எழுதச் சென்றபோது, பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, தேர்வுக்கு அனுமதிக்க மறுத்து விட்டனர். அப்போதே மிகவும் கவலையாக இருந்தான். இவனுக்குப் படிப்பு மீதுள்ள ஆர்வத்தைப் பார்த்த சிறைத்துறை அதிகாரிகள், வேலூர் மத்திய சிறைச் சாலையில் தேர்வு மையத்தை இந்த ஆண்டு ஏற்படுத்திக் கொடுத்து உதவினார்கள்.
இப்போது என் மகன் நிறைய மதிப்பெண்கள் எடுத்ததைப் பார்த்து, மகிழ்ச்சியில் நிற்கிறேன். அதே நேரம் மாணவர்களுக்குப் பள்ளியிலோ, கல்லூரியிலோ பேராசிரியராகப் பாடம் சொல்லித்தர வேண்டிய ஒருவன், சிறையில் இன்னும் மாணவனாகவே இருப்பதை நினைத்தால், மனது வலிக்கிறது. எப்படி இந்தப் பாடங்களில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்தார்களோ, அதுபோலவே சிறைக் கம்பிகளையும் தர்மம் என்ற சாவியைக் கொண்டு திறந்து வருவார்கள்” என்று நம்பிக்கையுடன் கண் கலங்கினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ”பேரறிவாள னையும் முருகனையும் எப்படி வாழ்த்​துவது என்று தெரியவில்லை. கடந்த 21 வருடங்களாகத் தாங்க முடியாத சோகத் தோடும் பிரிவுகளின் ஏக்கத்தோடும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் இவர்களுக்கு இந்த மதிப்பெண்கள் ஆறுதல் தரும். பேரறிவாளன் மாணவன் அல்ல. அவன் ஒரு பேராசிரியர். சிறையில் மற்ற கைதிகளுக்கு என் தம்பி பயிற்சி தரும் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அத்தனைக் கனிவான வார்த்தைகளால் சொல்லித் தருவான். பல இரவுகளில் அவன் உண்ணாமல்கூட படுத்தது உண்டு. ஆனால் புத்தகம் படிக்கா​மல் ஒருபோதும் உறங்கியது இல்லை.
அவர்கள் சிறைக் கூடத்தைக் கல்விக் கூடமாக மாற்றி வருகிறார்கள். மனைவி, மகளைப் பிரிந்திருக்கும் நிலையிலும் தம்பி முருகன் 983 மதிப்பெண்கள் எடுத்திருப்பது எத்தனை பெரிய சாதனை? அதிலும் வணிகவியல் பாடத்தில் 200 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். கூடிய விரைவில் சிறைக் கம்பிகளில் இருந்தும் அவர்கள் வெளியே வருவார்கள். நியாயம் எப்போதும் காப்பாற்றப் படும். ஆனால் அதற்கான காலம் அதிகமாவதுதான் வேதனை” என்று நெகிழ்ந்தார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், ”பேரறிவாளனிடம் இருக்கும் ஆற்றலுக்கு இன்னும் 100 மதிப்பெண்கள் அதிகமாகப் பெற்று இருக்க வேண்டும். முருகனும் அதே போலத்தான். என்னைப் பொறுத்த வரை அவர்கள் சிறையில் இல்லை. மாணவர்களாக விடுதியில் இருக்கிறார்கள். படிப்பை முடித்துவிட்டு அவர்கள் நிச்சயம் வெளியே வருவார்கள்” என்றார்.
சிறைக்கூடங்களில் இருந்தாலும் வைராக்கி​யமாகப் படித்தால் உயர்வான மதிப்பெண்கள் வாங்க முடியும் என்பதற்கு தன்னம்​பிக்கை உதாரணமாக இருவரும் திகழ்கிறார்கள்!
by 
உலகத்தமிழர்  நெட்வொர்க்