Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Tuesday, January 31, 2012

உங்க பசங்க எப்படி ...நல்ல எதிர்காலம் அவர்கள் கையில் ...உங்களால் கண்காணிக்க மட்டுமே முடியும் ,,,


உங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் கணினி பாதுகாப்பானதா ???

இணையம் என்னும் சமுத்திரத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக உலவ விடுவது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கடினமாக உள்ளது . கட்டுப்பாடு அல்லாத இணைய வசதி என்றுமே குழைந்தைகளுக்கு பாதுகாப்பாக இருந்தது இல்லை .உங்கள் கணினியில் உள்ள இணைய வசதியை பாதுகாப்பாக வைத்திருக்கா விடின் அது உங்கள் குழந்தையின் பாதுகாப்போடு சமரசம் செய்து கொள்வதற்கு நிகரானதாகும் .
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புவர் ஆனால் பலருக்கும் இதை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்று தெரிந்திருக்க வாய்ப்பிலை உங்கள் குழந்தையின் ஆன்லைன் செயல்பாட்டை நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க பல இலவச பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள் (parental Control Software ) இணையத்தில் இருக்கின்றது .அவ்வாறு ஒரு மென்பொருள் தான் (parental Control Software ) எனப்படும் பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள்




பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள் உங்கள் குழந்தைகள் செல்லும் பொருத்தமற்ற தளங்கள் காணொளிகள் மற்றும் படங்களை தானாகவே தடை செய்து விடும்

இந்த மென்பொருளை உபயோகிக்க முன் உங்கள் குழந்தையின் வயதை கணக்கில் எடுக்க வேண்டும் . எந்த நேரம் அவர்கள் இணையத்தில்இருப்பார்கள் ?, இண்டர்நெட் பயன்பாடு என்ன வகை. போன்றவற்றை கவனத்தில் கொண்டு இந்த மென்பொருளை நீங்கள் உபயோகப் படுத்தலாம்

அடிப்படையில், இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியில் நடக்கும் எந்த ஒரு செயல் பாட்டையும் கண்காணித்து நிறுத்த முடியும் .

இதன் பிரதான வசதிகள் கீழே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது .


  • ஃபிஷிங், ஆபாசம் , சூதாட்டம், போதை, வன்முறை / வெறுப்பு / இனவாதம், தீம்பொருள் / ஸ்பைவேர் உள்ளிட்ட மேற்பட்ட 70 பிரிவுகள், மற்றும் இணையத் தளங்களை தடுக்க முடியும் .
  • அனைத்து முக்கிய தேடல் இயந்திரங்களிலும் பாதுகாப்பான தேடல்களைப் பெற முடியும் .
  • குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இணைய இணைப்பு இருக்கும் படி மாற்றி அமைக்கலாம்
  • "எப்போதும் அனுமதிக்க" மற்றும் "எப்போதும் தடை" என்ற விருப்ப பட்டியலை இணையத்திற்கு ஏற்றவாறு செயல் படுத்தலாம்
  • சாட் மற்றும் ஆபாச உரையாடல்கள் தானாகவே தடை செய்யும் வசதி

சிறுவர்களை இணையத்தில் கண்காணிப்பது அல்லது பாதுகாப்பது பெற்றோருக்கு ஒரு சவாலான பணியாக உள்ளது. ஆனால் இந்த இலவச பெற்றோர்கட்டுப்பாட்டு நீங்கள் உங்கள் குழந்தையின் தோள் அருகே இருந்து பாதுகாப்பது போன்ற சௌகர்யத்தை தரும் .உங்கள் குழந்தையை பாதுகாப்பாக கண்காணிப்பதற்கும் அவர்கள் நடவடிக்கையை உளவு புரிவதற்கும் பாரிய இடைவெளி உள்ளது . எனவே இந்த மென்பொருள் மூலம் உங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடாமல் அவர்கள் பாதுகாப்பாக இணயத்தில் உலவ வழி செய்யலாம் .கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்
(tags parental control software in tamil , free parental control software)

தரவிறக்கச் சுட்டி     உங்க பசங்க எப்படி ...நல்ல எதிர்காலம் அவர்கள் கையில் ...உங்களால் கண்காணிக்க மட்டுமே முடியும் ,,,,உங்க விக்னேஷ் 

Sunday, January 29, 2012

மலையாளிகளுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் ----அங்கு உள்ள தமிழர் ஒற்றுமை ,,,,,,,,,,இங்கு இல்லை ஏன் ........?

மலையாளிகளுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் ----அங்கு உள்ள தமிழர் ஒற்றுமை ,,,,,,,,,இங்கு இல்லை ஏன் ........?



முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக, கனடா வாழ் 3 லட்சம் தமிழர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கனடா வாழ் தமிழர்கள் சார்பாக கனடாவின் தமிழ் படைப்பாளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் உலகத் தமிழினம் பொங்கி எழும்!

ஏழு கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்களையும்புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் கூட்டிப் பார்த்தால் உலகில் 8 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள்.

தமிழனுக்கு ஒரு இறைமையுள்ள நாடு இல்லாத காரணத்தால்தான் தமிழன் உதைபடுகிறான், வதைபடுகிறான். தமிழன் என்றால் ஏதிலி என்று உலகம் நினைக்கிறது.

இந்தியத் திருநாட்டில் தமிழன் கன்னடம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இருந்து அடித்து உதைத்து விரட்டப்படுகிறான். இப்போது தமிழர்களை உதைத்து வெளியேற்றுவதில் பக்கத்தில் உள்ள கேரளாவும் சேர்ந்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணை பலமாக இல்லை என்றும் அது எந்த நேரத்திலும் உடையலாம் என்றும் அதனால் அதனை இடித்துவிட்டு வேறு அணை கட்டப்போவதாக கேரளாக்காரன் சொல்கிறான்.

முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாகவும் எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை முடித்த பின் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

அந்த ஆணையை இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அந்தத் தீர்ப்பை செல்லாக்காசு ஆக்கிவிட்டது!

இன்றைய கேரளா பழைய சேர நாடாகும். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் சேரநாட்டவர். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் வீரம், படைத்திறன், ஆட்சி முறை, கொடை, சமுதாயம், பண்பாடு, மன்னர்களின் பண்பு நலன்கள், அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கிறது.

இடைக் காலத்தில் வடநாட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்களின் குடியேற்றத்தால் மொழிக்கலப்பு ஏற்பட்டு சேரநாட்டுத் தமிழ் மலையாளம் எனத் திரிந்து புது மொழியாயிற்று. அந்த மொழிக்கு வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றி இலக்கணம் எழுதப்பட்டது.

முல்லைப்பெரியார் அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மக்கள் வாழ முடியாத பாலைவனமாக மாறிவிடும். இதில் தலையிட்டு நீதி செய்ய வேண்டிய மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. இதனை நாம் பலமாகக் கண்டிக்கிறோம்.

கேரளாவுக்கு வேண்டிய உணவு தமிழ்நாட்டில் இருந்துதான் போகிறது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது முற்றிலும் தமிழர்கள் வாழும் பீர்மேடு, தேவிகுளம், இடுக்கி மாவட்டங்கள் கேராளாவோடு இணைக்கப்பட்டன.

இந்திய தேசிய மாயையில் இருந்த காமராசர், மேடாவது குளமாவது எல்லாம் இந்தியாவில் இருக்கின்றன என்று வேதாந்தம் பேசியதால் தமிழர்கள் இந்த மாவட்டங்களை இழந்தார்கள்.

தமிழ்நாடு சட்ட சபையில் முல்லைப் பெரியாறை இடிக்கக் கூடாது, புதிய அணையை கேரளா கட்டக் கூடாது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அணையின் உயரம் 136 இல் இருந்து 142 ஆக உயர்த்தப் பட வேண்டும் எனக் கேட்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது.

இப்போது முல்லைப் பெரியார் அணையை அண்டியுள்ள மக்கள் அரசியல் கட்சிகளை முந்திக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளார்கள். ஆனால் கேரளாவைப் போலல்லாது தமிழக அரசின் காவல்துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது.

மலையாளிகளுக்குச் சொந்தமான கடைகளைத் தாக்கினார்கள் என்ற குற்ச்சாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கேரளவில் உள்ள இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என மாநில அரசு மத்திய அசை வற்புறுத்த வேண்டும். தேவை ஏற்படின் ஒரு நேரடி வாக்கெடுப்பின் மூலம் மக்களது விருப்பத்தை அறிய வேண்டும்.

கேரளாவிலும் தமிழகத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்ளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். உடைமைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்.

தமிழக அரசு தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டு தமிழர் சார்பாகச் செயல் படவேண்டும். கேரளா அரசு மலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போல் தமிழக அரசும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல் படவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் என்பதை இந்த நேரத்தில் கனடாவில் வாழ்கின்ற மூன்று இலச்சம் தமிழர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: மேற்கண்ட அறிக்கை படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் திரு.வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்களால் வெளியிடப்பட்டது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே.பிரபாகரன், தந்தை செல்வா ஆகியோருடன் அரசியல் வேலை திட்டத்தில் இணைந்திருந்தவர். இவர் 55 ஆண்டுகால பதிரிகையாளரும் தமிழீழத்தின் புகழ்பூத்த பிரபல அரசியல் இலக்கிய விமர்சகருமாவார்.

இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரியவில்லை: குஷ்பு பேச்சு ---என்ன நியூஸ் இது கலைஞருக்கு தெர்யுமா,,,,,,?


இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரியவில்லை: குஷ்பு பேச்சு ---என்ன நியூஸ்,,,,,,,,,,,இது கலைஞருக்கு தெர்யுமா ,,,,,,,,? 




ஈரோட்டில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ’’இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம் தான். ஆனால் தமிழ் மொழியை மறக்க கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும்.

நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். தமிழ் மொழியை பேசுகிறேன்.

தமிழ் மொழியை நேசிக்கிறேன். தமிழ் உணர்வு- நரம்புக்கும், நாடிக்கும் ஒரு புத்துணர்வை ஊட்டுகிறது.

இந்தியாவில் மொத்தம் 42 மொழிகள் உள்ளன. இதில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றிருந்தது.

இந்த மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர்தான்.

இதனால் உலகம் முழுவதும் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான். தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறான். இந்த பெருமையை நமக்கு பெற்று கொடுத்தவர் கலைஞர் தான்.

தமிழ்நாட்டில் பலமணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. பால் விலை-பஸ் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுகின்றனர்’’ என்று முடித்தார் ,,,,,,,,

உங்களிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்டது ஒரு கேள்வியல்ல ஐயா.....?


கேள்வியல்ல ஐயா..

பதிந்தவர்: ஈழப்பிரியா 25 JANUARY 2012
உங்கள் யாழ்ப்பாணத்து கணக்கு வாத்தியார்தானையா எங்களுக்கும் கணக்கு வாத்தியார்….

யாழ். பல்கலைக்கழகத்தில் பேசிய அப்துல்கலாம் அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, தன்னிடம் ஐந்து கேள்விகளை கேட்கும்படி கூறியிருந்தார். ஆனால் ஒரேயொரு கேள்வி மட்டும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த ஒரு கேள்வி அப்துல்கலாம் உருவாக்கிய அணு குண்டைவிட அதிக சக்தியுள்ளதாக தெரிகிறது. அதேபோல கேட்கப்படாத மற்றைய நான்கு கேள்விகளும் வடக்கில் வீசும் வசந்தத்தை செருப்பால் அடித்துள்ளது.

ஐயா இத்தனை ஆண்டுகளாக நீங்கள் ஏன் இங்கு வரவில்லை..? இதுதான் அந்த மாணவனின் கேள்வி.

கலாம் சொன்ன பதில்: எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருக்கிறேன். புயலைக் கடந்தால் வசந்தம் வந்துவிடும் கவலைப்படாதீர்கள்.

2009 வன்னியில் நடைபெற்ற போரில் 140.000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். குழந்தைகளும், முதியோரும், பெண்களும் துடிதுடிக்கக் கொல்லப்பட்டுள்ளார்கள். வைத்தியசாலையில் குண்டு வீசப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் கட்டு மீறி நடந்துள்ளது. வெள்ளைக் கொடியோடு போனவர்களே சுடப்பட்டார்கள். இத்தனை நடந்தும் ஒரு வார்த்தை பேசாமல் இத்தனை ஆண்டுகள் ஒரு தமிழனாக இருந்தீர்களே.. இப்பொழுது எதற்காக வந்திருக்கிறீர்கள்..? இது அந்த மாணவனின் கேள்வியின் உள்ளர்த்தம்.

இந்தியத் திரைப்பட கதாநாயகன் உடன் பிறந்த சகோதரி வில்லனால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படும்போது வரமாட்டான். அவள் அழிந்த பின்னர் புயலைக் கடந்துவிட்டாய்.. இனி உனக்கு வசந்தம்தான் என்று சென்டிமென்டாக பேசியபடியே வருவான். நமது அப்துல்கலாம் பேசிய வசந்தமும் இப்படிப்பட்டதுதான். புயலைக்கடந்தால் தென்றல் வரும் தென்றலைக்கடந்தால் புயல் வரும்.. தானாக நடப்பதற்கு கலாம் ஏன் வரவேண்டும்..?

மனது கேட்கிறது..

இதைவிட முக்கியம் கேட்கப்படாத நான்கு கேள்விகள் : அப்துல்கலாம் எங்கு சென்றாலும் மூன்று கேள்விகள் அல்லது ஐந்து கேள்விகளை கேளுங்கள் என்று மாணவர்களைப் பார்த்துக் கூறுவார். காரணம் இந்திய மாணவர்கள் அவரிடம் கேள்விகளை சரமாரியாக கேட்பதால் அப்படி ஒரு கட்டுப்பாட்டைப் போடுவார்.

ஆனால் இங்கோ… அவரிடம் கேள்வி கேட்கவே தேவையில்லாத நிலை.. இது அவருடைய பல்கலைக்கழக கேள்வி – பதில் வரலாற்றில் விழுந்துள்ள முதலாவது சவுக்கடி.

நான்கு கேள்விகளை மாணவர்கள் கேட்காமலே எழுந்து போய்விட்டார்களே காரணம் என்ன..? பல பதில்கள் உண்டு, அவற்றில் சில :

01. இவரிடம் கேட்பதற்கு என்ன இருக்கிறது..

02. பத்திரிகையாளரை நுழைய விடாமல் அந்தக் கூட்டம் நடாத்தப்பட்டது. கேள்வி கேட்டால் நாளைக்கு கேட்டவரைத் தூக்க வெள்ளை வான் வரும்.. இதுதான் யாழ்ப்பாணத்தின் சீத்துவக்கேடு.. இராணுவ அச்சுறுத்தலுக்குள் இருக்கும் ஒரு சமுதாயம் கேள்வி கேட்கவே இயலாத நிலையில் இருக்கிறது. கேள்வி கேட்க நாலு பேர் இல்லாத ஒரு காட்டுத்தர்பார் அங்கே நடக்கிறது என்பதுதானே பொருள்..

அந்த கேட்கப்படாத நாலு கேள்விகளும் போதும் நாட்டு நடப்பை எடுத்து விளக்க..

ஐயா.. நீங்கள் இத்தனை நாளும் இங்கு ஏன் வரவில்லை.. மீண்டும் அதே கேள்வி.

மீண்டும் இன்னொரு முறை பதில்..

ஐயா.. நீங்கள் இங்கு வந்ததைவிட,

நீங்கள் செய்த அணுகுண்டை சிங்களவரிடம் கொடுத்திருந்தால் சந்தோசமாக தமிழர் மீது வீசிவிட்டு, நன்றிக்கடனுக்கு சீனாவுடன் உறவு கொள்ளாமல் இந்திய நலனைப் பேணியிருப்பார்களே..

ஆம்…

எங்கள் ஐயா…

உங்களிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்டது ஒரு கேள்வியல்ல ஐயா..

உங்கள் அணு குண்டைவிட சக்தி வாய்ந்த தமிழ் அணு குண்டு ஐயா.. ஒரு கேள்விக்கு ஆயிரம் அணுகுண்டைவிட அதிக வலு இருக்கிறது என்பதை படிக்க வேண்டுமானால் டெல்லிக்கு போகக்கூடாது யாழ்ப்பாணம் போக வேண்டும் ஐயா..

உங்களுக்கு கணக்கு படிப்பித்த யாழ்ப்பாணத்து கணக்கு வாத்தியார் கணக்குவிடவும் படிப்பித்திருக்கிறார் என்பதை உங்கள் புயல் பேச்சில் நாம் புரிந்து கொள்கிறோம்.. ஐயா.. அதே வாத்தியார்களிடம்தான் நாமும் கணக்கும், கணக்கு விடவும் படித்திருக்கிறோம் ஐயா..

வாழ்க இராமேஸ்வரம் அப்துல்கலாம்.

சீனாவின் அடுத்த முகம் ,,,,,,?

சீனாவின் அடுத்த முகம் 

‘இந்தியா தனது பாதுகாப்புச் செலவை அதிகரித்தாக வேண்டும்’
‘இலங்கையிலிருந்து சீனாவை வெளியேற்றியே ஆகவேண்டும்’
‘பனிப்போர்க்காலத்தில் சோவியத்யூனியன் பின்லாந்தைத் தன் காலுக்குக் கீழ் போட்டுக்கொண்டதுபோல் இந்தியாவும் இலங்கையை நசுக்கியே வைத்திருக்க வேண்டும்’
 

இதோ, அவர் உதிர்த்த முத்துக்களையெல்லாம் ஒரு மாலையாகக் கட்டி எமது வாசக நேயர்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்:

1) இந்தியா தனது தாராளப்பொருண்மியக் கொள்கைகளை கை விட்டுமுன்னர் போல்முக்கிய உள்நாட்டுத் துறைகளைப் பாதுகாக்கும்முயற்சிகளில்இறங்க வேண்டும். இந்தியா நவீனமான் பொருட்களை உருவாக்கிச் சந்தைப்படுத்தும் நவீன பொருளாதார வல்லரசாக மாற வேண்டுமேயாயின் அதற்கு இவ்வகையான முயற்சிகள் இன்றியமையாதவை. அவற்றைத் தவிர்த்து அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் ஒப்பந்தத் தொழிற்பாட்டாளனொருவனாகத் தொழிற்படும் இந்திய மனநிலை மாறவேண்டும். இந்த அணுகுமுறை இந்தியாவை என்றென்றைக்கும் ஒரு குடியேற்ற நாடு போலத்தான் வைத்திருக்கப் போகிறது.முன்னை நாட்களில் இந்தியா ஒரு குடியேற்ற நாடாகத் திகழ்ந்தமைக்கும் இப்போதைய நிலைப்பாட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாதோவெனில் அது இப்போது இந்தியா இதனை விரும்பி செய்கின்றதென்பதேயாம்.

2) இந்தியா பற்றிய அமொரிக்க வெளியுறவுக்கொள்கையானது என்றென்றைக்கும் புத்திசாலித்தனமாகத் தான் இருந்தது என்றுயாராலும் கூறிவிட முடியாது.

3) உலக அரங்கில் இந்தியாவின் பொருண்மியவளர்ச்சிக்குரிய அரசியல் பலத்தை இந்தியா இன்னமும் பெறவில்லை. உதாரணமாகச் சொல்லப்போனால் சீனவை எதிர்கொள்வதற்கான அரசியல் பலத்தை இந்தியா பெறவண்டுமேயாயின், இந்தியாவின் பாதுகாப்புச் செலவினம் பன்மடங்கு அதிகரித்தாக வேண்டும். அத்தோடமையாது அண்டை நாடுகள் மீதும் அது தனது பொருண்மியப் பலத்தை முழுவதாகக் காட்டியாகவேண்டும்.

4) உடனடியாகச் செய்யப்படவேண்டிய அரசியல் நடவடிக்கை ஒன்று இந்தியாவுக்குண்டு. பனிப்போர் நாட்களில் எப்படி சோவியத்யூனியன் பின்லாந்தை தன் கால்களின் கீழ் போட்டு நசுக்கியதோ அதே போல, இந்தியாவும் இலங்கையைத் தனது ஏவல் நாடாக மாற்றவேண்டும் என்பது தான் அது. அதன் உடனடி விளைவாக இனிமேல் எவரும் எந்தக் கட்டத்திலும் இந்தியாவின் அனுமதியின்றி இலங்கையில் தலையிட முடியாது என்ற நிலை உருவாக வேண்டும். எடுத்துக்காட்டாகச் சொல்லப்போனால், அம்பாந்தோட்டையில் சீனாவின் முயற்சியில் துறைமுகம் ஒன்று உருவாகும்போது இந்தியா பார்த்தும் வாளாவிருந்தது ஏற்புடைய செயலன்று.

இனி நாம் திருவாளர் ஏவரியின் இந்த முன்னுக்குப்பின்னான முரண்டுவாதங்களின் அடைப்படைகளயும், நோக்கங்களையும் விளைவுகளயும் ஒரு தடவை நோக்குவோம்.

திரு ஏவரி அவர்கள் இப்போது வர்த்தகத் துறையில் நிறுவனங்களுக்கு ஒரு ஆலோசகர் என்பதை நாம் மறந்து விடலாகாது. இந்தியா, தகவல் தொழில் நுட்பத்துறையில் அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்கக் கூடாது, அனால் அண்டை நாடுகளை நசுக்கும் ஏகாதிபத்தியமாக மாறவேண்டும், அதற்காகப் பாதுகாப்புச் செலவினத்தைக்கூட்டி மறுபடியும் அமெரிக்க ஆயுத நிறுவனங்களின் அடிமை நாடாக மாற வேண்டும் என்று முன்னுக்குப்பின் முரணான வாதங்களையெல்லாம் அவர் முன்வைப்பது தடுமாறிப் போயல்ல.

இந்திய அரச நிர்வாகிகளின் ஏகாதிபத்திய ஆசைக்கும் கமிஷன் பணப் பேராசைக்கும் ஒரே தடவையில் தூபமிடுவதன் மூலம் இந்தியாவை அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் நிரந்தர வாடிக்கையாளராக மாற்றிவிடும் தனது தொலைநோக்கு உத்தியை வெகு சாதுர்யமாகத் திணிக்கின்றார் திரு ஏவரி அவர்கள். அதன் பின்விளைவாக இந்து சமுத்திரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இடம்பெறப்போகும் பலப்பரீட்சையில் நசுங்கப்போவது சின்னஞ்சிறு அண்டை நாடுகள் தாம் என்பது அவருடைய மனச்சாட்சியை உறுத்தவேயில்லை என்பதுமட்டுமல்ல, அந்த மாதிரியான பின்விளைவை அவர் முழுமனதோடு விரும்புகின்றார் என்பது தான் கவலைக்குரிய விடயம்.

அடுத்ததாக இலங்கையைக் காலுக்குக் கீழ் போடும் அவருடைய கோட்பாட்டின் காரணமாகத் தமிழீழ மக்களின் வாழ்வில் இடம்பெறக்கூடிய அனர்த்தங்களையும் ஒரு தடவை நோக்குவோம்:

முதலில் நாம் கவனிக்க வேண்டியது இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதோ அவர்களுக்குப் பிரச்சினைகள் உண்டு என்பதோ அவருடைய பூதக்கண்ணாடிக்குக் கீழ் அகப்படாத விவரங்களென்பதாகும். அவரைப் பொறுத்த வரைக்கும், அது ஒரு பாரதூரமான விவரமேயல்ல. ஏனெனில், இலங்கையானது முற்றிலும் ஒரேதன்மைத்தான ஒரு அரசியல்-பூகோள உருவாக்கம் என்ற அடிப்படையில் அணுகினாலே ஒழிய அவருடைய ‘காலால் நசுக்கும் சித்தாந்தம்’ வலுவற்றுப் போய்விடுகிறது.

அதனால் தான் திரு ஏவரியின் கனவில் வந்துபோகும் இலங்கைத்தீவில் இரு நாடுகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுமட்டுமல்ல் அங்கே சமஷ்டித் தீர்வு போன்ற ஒரு பேச்சுக்குக் கூட இடமிருக்காது. ஏனெனில், கொழும்பில் நிலை கொண்டிருக்கும் ஏவற்பணி அரசொன்று இந்தியாவின் ஆஞ்ஞைகளைப் பருத்தித்துறையிலிருந்து தங்காலை வரையில் ஒரேவிதமான பாங்கில் நிறைவேற்றக் கூடியதாகவிருக்கும்.

இரண்டாவதாக, இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று ஒன்று வந்தமைந்து விடக் கூடாது. இரு தனி நாடுகள் என்றோ, அன்றில் ஒரு சமஷ்டி தீர்வு என்றோ தீர்வு ஒன்று வந்து, இரு சாராரும் தத்தம் பொருண்மிய மேம்பாட்டுக்கென்று உழைக்கத் தொடங்கினால், அந்த நிலை முதலில் இந்தியாவின் பொருண்மிய ஆதிக்கத்துக்கு விழுந்த ஒரு அடியாகவே கருதப்படும். அத்தோடு தனது புதிய உற்பத்திகளைப் பரிசோதித்துப பார்க்கும் சந்தைத் தளமென்று ஒன்றும் அதற்கு இல்லாது போகும்.

மூன்றாவதாக உள்நாட்டில் அமைதியின்மையால் பணத்தையும், பலத்தையும் இழந்து பொருண்மியவளர்ச்சியையும் துறந்தாலே ஒழிய இந்தியாவின்காலின் கீழ் கிடந்து சுழலும் சிறிய அண்டை நாடென்ற நிலை இலங்கைக்கு வருவது அவ்வளவு எளிதன்று. இனவாதம் என்னும் நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்போது தமிழினத்தின் தற்காப்புச் சக்தியும் துடைத்தெறியப்பட்டு விட்டால், அந்நிலயில் இந்தியப்படைகளுக்கு தமது நவீன அமெரிக்க ஆயுதங்களைப் பரீட்சித்துப்பார்க்கும் இடையூறெதுமற்ற பரீட்சைக்களமாக இலங்கை மாறுவது தவிர்க்க முடியாதது.

சிங்கள மக்களின் கட்டுப்பாடற்ற இனவெறிக்குத் தூபம் போட்டுக்கொண்டிருக்கும் வரையில் அவர்கள் தன்னாட்சி, சுதந்திரம் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்பது அவர்கள் மகிந்த ஆட்சியின் கீழ் நடந்துகொள்ளும் விதங்களிலிருந்து ஏற்கெனவே தெளிவாகிவிட்டது என்பதனால், இலங்கையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கான கொள்கை வகுப்பு என்பது இந்தியாவுக்கு ஒரு பொருட்டல்ல.

ஆக, மொத்தத்தில், முன்னுக்குப்பின் முரணாக வாதாடும் அனவருமே அதிகப் பிரசங்கிகளுமல்ல, முட்டாள்களுமல்ல. கருமமே கண்ணான மேதாவிகள் பலரும் அங்கேயும் இருக்கத் தான் செய்கிறார்கள். யாரென்ன சொன்னாலும், முடித்துவைக்கவென்று எடுத்த பணிகள் பல அவர்களுக்கும் இருக்கின்றன. அந்த வகையில் திரு ஏவரி அவர்களும் அடங்குகிறார் என்பது நாம் கவலையோடு உற்றுநோக்க வேண்டியதொன்று.,,,,,,,உங்கள் விக்னேஷ் ,,,,

இன்ஜினியரிங் மாணவர்கள் தற்கொலை ....என்ன காரணம்,,,,,?



  இன்ஜினியரிங் மாணவர்கள்  தற்கொலை ....என்ன காரணம்,,,,,?   ரிப்போர்ட்   உங்கள் விக்னேஷ் ,,,,,,,,,,,



ரயிலில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

ஓடும் ரயிலில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.சென்னையில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் கொல்லம் சென்ற சிறப்பு ரயிலில் அவர் புதன்கிழமை இரவு வந்து கொண்டிருந்தார். தான் பயணம் செய்த பெட்டியின் படிக்கட்டு அருகே நின்று வந்து கொண்டிருந்த அவர், கோவை பீளமேடு ரயில்நிலையம் அருகே வந்தபோது திடீரென கீழே குதித்தார்.இதைப் பார்த்த சக பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். பலத்த...
Source : Dinamani | 29 நாட்களுக்கு முன்
Category : City | City : கோவை

நாகர்கோவில் அருகே தாய் இறந்த சோகத்தில் பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை

நாகர்கோவில் அருகே தாய் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாததால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி விஜயராணி. இவர்களுக்கு பிரதீஸ் என்ற மகனும், பிரேமி என்ற மகளும் உண்டு. பிரதீஸ் தக்கலை அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். பிரேமி நாக்ர்கோவில் அருகே உள்ள ஒரு பொறியியல்...
Source : Oneindia | 100 நாட்களுக்கு முன்
Category : Headlines

ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அருணா (வயது19). இவர் மயிலத்தில் உள்ள மயிலம் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக் என்ஜீனீயரிங் படித்து வந்தார்.கல்லூரி விடுமுறையில் தனது வீட்டிற்கு சென்றிருந்த அருணா, மனவேதனையுடன் காணப்பட்டாராம். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி அருணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கல்லூரி விடுதி கட்டணம் உள்ளிட்ட கல்லூரி கட்டணத்தை...
Source : Maalaisudar | 198 நாட்களுக்கு முன்
Category : Others

கல்லூரி மாணவி கொலை வழக்கில் குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார்: எஸ்.பி.

விடுதியொன்றில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். கண்ணப்பன்.அரியலூரில் கடந்த சில நாள்களுக்கு முன் விடுதியொன்றில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய குற்றவாளி அகில்ராஜின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்ட போது, செல் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். நீதி...
Source : Dinamani | 158 நாட்களுக்கு முன்
Category : City | City : அரியலூர்

தெலுங்கானா: மாணவி தீக்குளிப்பு

ஐதராபாத்: தனித்தெலுங்கானா கோரி ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் 18 வயது கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தனித்தெலு<ங்கானா அமைப்பது தொடர்பாக காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து கடிதம் எழுதி வைத்துள்ளார். பின்னர் அவரது வீட்டில் தனி அறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவர் வீட்டிற்குள் உடல் கருகி பலியானார். கடந்த 2 நாட்களில் 2 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர்....
Source : dinamalar | 118 நாட்களுக்கு முன்
Category : Others

செவிலியர் பயிற்சி மாணவி தற்கொலை : சாவில் மர்மம் எனக் கூறி உறவினர்கள் சாலை மறியல்

விருதுநகர், ஆக. 14: விருதுநகரில் அரசு செவிலியர் பயிற்சி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.அவரது சாவில.....
Source : Dinamani | 167 நாட்களுக்கு முன்
Category : City

இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தாயாருடன் தற்கொலை-மாணவரும் தற்கொலையால் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கல்லூரி மாணவி அவரது தாயுடனும், அதே கல்லூரியில் படித்த மாணவனும் திடீரென தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரி்த்து வருகின்றனர்.காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் கச்சியப்பன் தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம் மகள் ஹேமபிரியா (21). அதே பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், ஹேமபிரியாவும், அவரது தாய் நாகபூஷனமும் (45) ஒரே அறையில் தூக்குப்...
Source : Oneindia | 167 நாட்களுக்கு முன்

விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவம்: ஆட்சியர் விசாரணை

5: ஆத்தூர் கல்லூரி விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகிகளிடம் மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினார்.அப்பமசமுத்திரம் கிரீன்டெக் மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி கல்பனா (17), கடந்த 28-ம் தேதி இரவு கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்தனர். கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்றது.இந்நிலையில் கல்லூரி...
Source : Dinamani | 23 நாட்களுக்கு முன்
Category : City | City : சேலம்

செல்போன் பேச்சை கண்டித்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவி

செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததை குடும்பத்தினர் கண்டித்தால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி மாணவி உடன் செல்போனில் பேசி வந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம், ஜான்சன்பேட்டை அடுத்த நல்லாங்காட்டை சேர்ந்த தமிழ்வாணனின் இளைய மகள் பிரியங்கா(21). இவர் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பிரிவில் 2ம்...
Source : Oneindia | 50 நாட்களுக்கு முன்
Category : Headlines | City : சேலம்

இங்கிலாந்தில் முன்னாள் காதலனை கூலிப்படை வைத்துக் கொன்ற இந்திய மாணவி

இங்கிலாந்தில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற முன்னாள் காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.இங்கிலாந்தில் உள்ள கென்ட் பகுதியைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முண்டில் மாஹில் (20). மருத்துவக் கல்லூரி மாணவி. அவரது முன்னாள் காதலர் சிக் டிவி உரிமையாளர் ககன்தீப் சிங் (21). ககன்தீப் சிங் முண்டிலிடம் தகாத முறையில் நடக்க முயன்றதை அடுத்து...

சோ இன்னும் பல தற்கொலைகள் நடக்க காரணம் என்ன ,,,,,,,?

1 ) அவர்களின் மனதில் உள்ள பயம் ஒரு முக்கிய காரணம் ,,,,,
2 )அவர்களின் மனதில் நம்பிக்கை இல்லை ,,,,,,,,,,,
3 )நாம் இன்னும் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கு அதை ஏன் அவர்கள் நினைக்கவில்லை ,,,நாம் பிறக்கும் போது என்ன கற்றுக்கொண்ட பிறந்தோம் ,,,
4 ) அதை விட சிலருக்கு சில குறிப்பிட்ட பாடங்களில் tholvi அடைவோம் என்று பயம் ,,
5 )சில மாணவர்களுக்கு சில கெட்ட செயல்களில் ஈடுபடுவது ,,,,,,
6 )காதல் விவகாரங்களில் செய்யலபடுவது,,,,,,,,(எந்த      மாணவர்களுக்கும் இளம் வயதில் வருவது காதல் என்ற இந்த கொடிய நோய் இதை விட வயது ஒரு முக்கிய காரணம் ,என்று naan சொல்வேன் ,ithan முக்கிய காரணம் சினிமா தாக்கம் ,,இது ஒரு நிகழ்வு என்று இந்த வயதில் வரும் என்றும் யாரும் புரிந்து kolvathu இல்லை ,,,,

7 ) மாற்றங்கள் மனதில் வரும் வாழ்வில் வரும் உங்களை அந்த சமயத்தில் எடை போட்டு பாருங்கள் (உங்களை உங்களுடன் ஒப்பிடுங்கள் )
இப்படி பல காரணம் சொல்லிகொண்டே போகலாம் ,,,,,



                                                               உங்கள் விக்னேஷ்  

நமக்கு தெரிந்த புக் இது தான,,,,?

நண்பர்களே,
தமிழனாய் இருந்து கொண்டு எத்தனை பேர் நம்மில் தமிழ் புத்தகங்களைப் படிக்கிறோம். தமிழில் எண்ணற்ற புத்தகங்கள் மிகச் சிறந்தவைகளாக உள்ளன, அதில் எத்தனை புத்தகங்கள் நமக்கு தெரியும்.



நமக்கு தெரிந்த புக் இது தான,,,,

தமிழ் நேசி நூல் வாசி, என்கிற இணைய வாசகர் வட்டம் மூலம் , புதைந்து கிடக்கும் நல்ல தமிழ் புத்தகங்களை இன்றைய இளைஞரிடத்தில் எடுத்து செல்வதே எங்கள் நோக்கமாகும் ,,,,,,

தமிழா! நீ பேசுவது தமிழா…?




தமிழா!
நீ
பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்
‘மம்மி’ என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை
‘பேபி’ என்றழைத்தாய்…
என்னடா, தந்தையை
‘டாடி’ என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்…
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
உறவை ‘லவ்’ என்றாய்
உதவாத சேர்க்கை…
‘ஒய்ப்’ என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை…
இரவை ‘நைட்’ என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை ‘ஸ்வீட்’ என்றாய்
அறுத்தெறி நாக்கை…
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான்
‘லெப்ட்டா? ரைட்டா?’
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி ‘பைட்டா?’
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் ‘லேட்டா?’
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை
‘பிரண்டு’ என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
‘சார்’ என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
பாட்டன் கையில
‘வாக்கிங் ஸ்டிக்கா’
பாட்டி உதட்டுல
என்ன ‘லிப்ஸ்டிக்கா?’
வீட்டில பெண்ணின்
தலையில் ‘ரிப்பனா?’
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா? 

உங்க தமிழன் விக்னேஷ் 

சிந்தித்து ஓட்டு போடுங்கள் ,,,,,,குடிமக்களே ,,,,,,,,


ஓட்டு போடுவது உங்கள் உரிமை ,,,,,

கட்சி மாறுவது எங்கள் கடமை ,,,,,,,

அடுத்த கட்ட தேர்தலுக்கு தயாராகும் ,,,,,கட்சி ,,,,,,,?




Saturday, January 28, 2012

டேய் நாங்க இதுக்கும் கலரா பரப்புவோம்



டேய் நாங்க இதுக்கும் கலரா பரப்புவோம் ,,,,,,,, போலிகளை கண்டு ஏமாரதிர்கள்,,,,,,,,உங்க விக்னேஷ் ,,,,,,,

'கிங் மேக்கர்',,,,,,,,,தமிழ் நாட்டில் உங்கள் கால்பட்டதற்கு நன்றி ஐயா ,,,,,,,,,


தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

தமிழ் நாட்டில் உங்கள் கால்பட்டதற்கு நன்றி ஐயா ,,,,,,,,,

வாகனம் நிறுத்துமிடம் ,,,,,,?சிரிப்பதற்கு அல்ல சிந்திக்க ,,,,விக்னேஷ் ,,




இரத்தத்தை தானம் செய்யுங்கள். சாலைகளில் சிந்தாதீர்கள்.

உங்கள் உயிரும், உங்களது இரத்தமும் விலைமதிப்பற்றது

என்பதை உணருங்கள்......



* மிக அதிக வேகம்.....

* தலைக்கவசம் அணியாமல் செல்வது....

* மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுதல்...

* செல் போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது...

* போக்குவரத்து வாகன விதிமுறைகளை மதிக்காமல்

வாகனத்தை ஓட்டுவது.

இவைகள் தான்

பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகின்றது.                                   

                                                                         உங்கள் விக்னேஷ் ,,,,,,,

இப்படியே நாடு போனா நாம்பளும் லைன்ல நிக்கவேண்டியதுதான்


வாழ்க தமிழ் நாடு ----எங்களிடம் கல்விக்கு பதில் கள்ளச்சாராயம் கிடைக்கும் ,,,,
உங்கள் பதிவுக்கு முந்துங்கள் ,,,,,
இடம் ---தலைமை செயலகம் ,,,சென்னை.....? 

இப்படியே நாடு போனா நாம்பளும் லைன்ல நிக்கவேண்டியதுதான்,,,,,
ரேஷன் கடையில கூட இப்படி ஒரு Queue பாக்க முடியாது போல ....

சரி சரி, நீங்க எல்லாரும் கிளம்பிட்டாங்களா???

அக்கா பொறை ஏறிடப்போவுது பாத்து,,,,,?


அக்கா பொறை ஏறிடப்போவுது பாத்து,,,?

எங்க இந்திய பாதுகாவலன் நிலைமை இது தான் ,,,,,,,,,?

இறந்தால் ஒரு வீர பதக்கம் ஒரு கல்வெட்டு ,,,,,,,

நாம் திரும்பி பார்போம் நமது வீரர்களை ,,,,,,,,,?

போதி தர்மரைப் போன்ற மருத்துவ குணம் புதைந்து கிடந்ததால் தான் இந்த அளவுக்கு அவர்களால் பிரகாசிக்க முடிந்தது,,,,,,,சார் இந்த விஷயம் அய்யாவுக்கு தெர்யுமா......?


தர்மபுரியில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாநில செயலாளரான அருள் பேசும்போது, ‘‘நமது இனத்தின் திறமையை மெய்பிக்க வந்த சினிமா தான் ‘ஏழாம் அறிவு’. பல்லவ இனத்தைச் சேர்ந்தவரான போதி தர்மரும் ஒரு வன்னியர் தான். ஆக எய்ட்ஸ் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பது உள்ளிட்ட உலகளாவிய திறமை கொண்ட டி.என்.ஏ&வும், ஜீனும் ஒவ்வொரு வன்னியனுக்குள்ளும் மறைந்து கிடக்கிறது. நம் மருத்துவர் அய்யாவும், சின்ன அய்யாவும் முறைப்படி பயின்ற மருத்துவர்கள் என்றாலும் அதைவிட அவர்களின் ரத்தத்திலேயே போதி தர்மரைப் போன்ற மருத்துவ குணம் புதைந்து கிடந்ததால் தான் இந்த அளவுக்கு அவர்களால் பிரகாசிக்க முடிந்தது."

சார் இந்த விஷயம் அய்யாவுக்கு தெர்யுமா,,,,,,,அடுத்த mp நீங்கதான் ,,,,,,
 
இப்படி எதாவது பண்ணி கட்சி பெர நாசம் பண்ணாதிங்க ,,,,விழுதிடுங்கள் தலைவர்களே இனி ஒரு விதி செய்வோம் ,,,,,உங்க விக்னேஷ் ,,,,,