Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, June 28, 2012

இந்த offer இந்தியாக்கு மட்டும் தான,,,,,

கடற்கரை அருகே காற்று வாங்க போனால் இரண்டு வருடம் சிறை ===இப்படியும் சொல்லுவாங்க போல 

இலங்கை சிங்களருக்கு ஒரு வேண்டுகோள்----

இந்த offer இந்தியாக்கு மட்டும் தான,,,,,

சென்னை:  கச்ச தீவு பகுதியில் மீன்பிடித்தால் 20 ஆண்டு சிறைத் தண்டனை என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளது குறித்து மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கை வருமாறு;
கேள்வி: பிரேஸில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசுகையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்தால் இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்பதைப் போல சொல்லியிருக்கிறாரே?
பதில்: இந்தியாவின் பெயரையோ, தமிழ்நாட்டின் பெயரையோ அவர் நேரடியாகக் கூறவில்லை என்றாலும் இலங்கைக்கு அருகில் வடக்கில் உள்ள பக்கத்து  நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்று அடையாளம் காட்டியிருக்கிறார். இலங்கைக் கடல் பரப்பில் மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்களைக் கைது செய்தாலே இனி இந்தச் சட்டப்படி அவர்களைத் தொடர்ந்து இருபதாண்டுகளுக்கு சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர் என்பதை அவருடைய இந்தப் பேச்சு உணர்த்துகிறது. எனவே இது குறித்து மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட முன்வர வேண்டும். 

தமிழக தலைவர்களை விமர்சித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் கொழும்பை எச்சரிக்குமாறு டில்லிக்கு கூறுகிறார் ராமதாஸ்

சென்னை:  தமிழக அரசியல் தலைவர்களினதும் தமிழர்களினதும் தன்மானத்திற்கு சவால் விடுத்துள்ள இலங்கை ஜனாதிபதியும் அவரது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள பட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ராமதாஸ், தமிழக தலைவர்களை விமர்சித்தால் மோசமான விளைவுகள் ஏற்படுமென மத்திய அரசு இலங்கையை எச்சரிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இலங்கை மின்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கையில் தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழீழத்துக்காக இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் பேரிழிவுதான் ஏற்படும். தமிழீழம் அமைக்க தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் முயற்சிக்கக் கூடாது. அவர்களின் விருப்பங்கள் நிறைவேறாது எனக் கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சரின் இந்தப் பேச்சு தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவால். இதை தமிழகத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டும்.

இந்தியா கண்டனம் தெரிவிக்காததால் தான் தமிழகத் தலைவர்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற துணிச்சல் சிங்களவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை இனியும் அனுமதிக்கக்கூடாது. சம்பிக்க ரணவக்கவும் அவரது அரசியல் குருவான இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழக தலைவர்களை விமர்சித்தால் மோசமான விளைவு ஏற்படும் என்று கொழும்பு செல்லும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மூலம் இந்திய அரசு இலங்கையை எச்சரிக்க வேண்டும்.

Friday, June 22, 2012

கம்ப ராமாயணத்தை கொளுத்த முயன்ற கண்ணதாசன்




கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்... கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிஷம் யோசிச்ச கண்ணதாசன், சரி... அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது,,,,,,,
உலகத்தமிழர் நெட்வொர்க் 33

ஆன்மிக சிந்தனைகள் – விவேகானந்தர்

ஆன்மிக சிந்தனைகள் – விவேகானந்தர்



ஒவ்வொரு உயிரிலும் கடவுள்

*சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
* ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
* உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
* தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை
செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.

மன உறுதியுடன் இருங்கள்
* ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக் கின்றான். அவனை உணர்ந்த வனே உண்மையை உணர்ந்தவன் ஆவான்.
* தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லா வற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல் பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான் இதற்குக் காரணம்.
* எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூய வராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டு மானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும்.
* உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.
* எந்த விஷயத்தையும் நன்கு ஆய்ந்து பாருங்கள். கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மனவுறுதி யுடன் இருங்கள்.

உண்மையான மகிழ்ச்சி
* உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக
நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.
* அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை
மகிழ்விக்க முடியாது.
* கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது
செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.
* மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை
தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.
* கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம்
அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி
சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.

உன்னைப் பற்றியே சிந்திக்காதே!
* சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல
பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய
முற்படுவர். அதன்மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக் கொள்கிறான்.
* தீமையைச் செய்வதால், நமக்கு நாமே
தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால் நமக்கு நாமே நன்மை தேடிக் கொண்டவர்களாகிறோம்.
* சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் தெரிந்து
கொள்வதால் என்ன நன்மை விளையப்போகிறது!
நல்லவர்களாக வாழுங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்வைப் பயனுடையதாக்குங்கள்.
* சுயநல எண்ணம் சிறிதும் இல்லாமல், பணம், புகழ்
என்னும் எதிர்பார்ப்பு வைக்காமல் பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே ஒருவன் தொண்டு செய்தால், உலகத்தையே மாற்றி அமைக்கும் சக்தி
அவனிடமிருந்து வெளிப்படும்.
* நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பது
சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவமாகும். சுயநலஎண்ணம் எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு
ஒருவன் கடவுளை நெருங்க முடியும்.

மதத்தின் ரகசியம்
* நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும். உங்கள் குரல் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். நீங்கள் மனித குலத்திற்கு
ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்.
* உடலையும் புலன்களையும் வழிநடத்தும் போது, மனம் என்ற கடிவாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* சிறு சிறு ஆசைகளை அனுபவித்துத்தீர்க்க வேண்டும். பெரிய ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டுவிட வேண்டும்.
* இல்லறத்தில் வாழ்ந்தபடியே காமத்தையும், பணத்தாசையையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள்.
* மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை. செயல்முறையில் தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது தான் மதத்தின் முழுப்பரிமாணமாகும்.
* ஒருவன் தன்னை வெறுக்கத் துவங்கிவிட்டால், அவன் கீழ்நிலைக்குச் செல்வதற்கான கதவு திறந்துவிட்டது என்று பொருள்.
* எந்த வேலையாக இருந்தாலும், அதனைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி. எந்த வேலையும் அற்பமானதல்ல.

விருப்பங்கள் நிறைவேறும்
* அனைத்திலும் இறைவனை காண்பது
நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும்
ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
* வாழும் காலம் எவ்வளவு
வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், லட்சியத்தை அடைவதே நம்முடைய
உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.
* இயற்கையின் ரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்வதுடன் மரணத்தையும்
வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை
அனுபவிக்கிறான்.
* நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம்
மாறுவதுடன், குரலும், தோற்றமும் மாறுகிறது.
அப்போது நீங்கள், மனித குலத்திற்கு ஒரு
வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.
* பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

அன்புதான் வாழ்க்கை
* நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதும் அன்பு செலுத்துவதுமே வாழ்க்கை. அதுவே வாழ்க்கை நியதி.
* மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப் படுகின்றன.
* கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப் படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணம்ஆகாமல் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
* அனைத்து தேவைகளையும், துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

* உன் உடலில் விழுந்த ஒரு துளி மையைப் பற்றி கவலைப்படாதே! இறைவன் என்னும் கருணைக்கடலில் மூழ்கி
எழுந்திரு, இது போன்ற ஆயிரம் துளிகள் இருப்பினும் அவை இருந்த இடம் தெரியாமல் போகும்.
* நமக்கு நாமே நன்மை செய்து மோட்சத்தை அடைவதைவிட மற்றவர்களுக்கு நன்மை செய்து,
ஆயிரம் நரகங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை.
* “சமயம்’ என்ற பெரிய கறவை மாடு பல முறை உதைத்திருக்கலாம். ஆனால் அதை நாம் பொருட்படுத்த வேண்டாம். காரணம் கறவை மாடு அதிகம் பால் தருகிறது. இதனால் பசுவின் உதையைப் பால்காரன் பொருட்படுத்த மாட்டான்.
* துணிந்து செயல்படுங்கள். எதையும் முடிக்க வேண்டும் என்ற முடிவுடன் செயல்பாட்டில் இறங்குங்கள்.
“முடியாது’ என்ற வார்த்தையை அகராதியை விட்டு அகற்றுங்கள்.

Monday, June 18, 2012

நம் நாட்டின் குடியரசு தலைவர் ஆக இவருக்கு என்ன தகுதி இருக்கு ,,,,,,,,,விக்னேஷ்

இந்த கால அரசியல்வாதிகள் தன் மக்களுக்கு உழைத்ததை விட அவர்களின் குடும்பத்திற்கு உழைத்தது தான் அதிகம் ,,,,,,,அனால் இவரோ இந்தியா-வில் பிறந்தது நமக்கு பெருமை ,,,விவேகனந்தர் மறு பிறவி எடுத்த சான்று இவரை நமக்கு நினைவுபடுத்துகிறது,,,,,,,,,,,,?

இவரை நம் நாட்டின் குடியரசு தலைவர் ஆக இவருக்கு என்ன தகுதி இருக்கு ,,,.

உலகத்தமிழர் நெட்வொர்க் வேண்டுகோள் ,,,,,,



இந்தியனை மிச்சம் வைக்க இந்த அரசியல் நடக்கிறதா ,,,,,,,


குழந்தை கூட கொஞ்சும் இந்த வெண்ணிற தாமரையை --


நம் நாட்டு குடியரசில் தலைநிமிர செய்ய எந்த ஒரு அரசியல்வாதிகளும் குரல்கொடுக்கதது வருத்தம் அளிக்கிறது ,,,,, 


பொக்ரான் அணு குண்டு புகழ்ந்தது இந்த புத்துணர்வு மனிதனை ,,,,



ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்




 அடுத்த ஜென்மம் எனக்கு இவர் ஆசிரியர் ஆக இருக்க கடவுளிடம் வரம் கேட்பேன் ,,,,,,,


ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும்ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 151931ராமேஸ்வரம்இந்தியாவின்முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும்பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO),பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 11-வது இந்தியக் குடியரசுத் தலைவராவார். இவரது பணிக் காலம் 2002-2007 ஆகும்.இவர் "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு கருதியே அப்பெயர் பெற்றார். இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையான பொக்ரான்-II (1998) சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார். முதல் அணு ஆயுத சோதனை 1974-ல் நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (திருவனந்தபுரம்,கேரளா) வேந்தராகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் போன்ற சிறப்பு நிலைகளில் உள்ளார்.





அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ளராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக குறிப்பிட்டுள்ளார். கலாம் பிறந்த வீடு தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இந்த ஊருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன்பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரானதனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது. தண்ணீர் என்பது அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூடப் பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் பெருமை மிகு மாநாடாக செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலை பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அதிர்ந்து போகிறார்கள்.
உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கும் தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவரும், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான ஏவுகணை மனிதர் ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்களை ஏன் அழைக்கவில்லை என்ற வினா பூதாகாரமாக எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழக அளவில் உள்ள அனைத்து மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். அல்லது வரவழைக்கப் பட்டுள்ளனர். ஆனால் அப்துல் கலாம் ஏன் வரவில்லை? அப்துல் கலாம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டாரா? போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
அப்துல் கலாம் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுந்து வருவது குறித்து மாநாட்டுப் பொறுப்பாளர்கள் விளக்கம் அளிக்க மறுத்து வருகின்றனர்.
அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றால் மீடியாக்கள் அவரைச் சுற்றியே வட்டமிடும். பொதுமக்களும் அவரைக் காணவே விரும்புவார்கள். குழந்தைகளும் மாணவர்களும் அவரோடு பேசப் போட்டி போடுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட நிகழ்ச்சி நடத்துபவர்கள் விரும்பவில்லை. எனவேதான் அப்துல்கலாமை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.

உலகத்தமிழர் விக்னேஷ் 
இந்த பதிவு இந்திய அரசை ஒரு இந்தியன் மண்டியிட்டு கேட்கும் வேண்டுகோள் ,,,,

Thursday, June 14, 2012

ஸ்பெக்ட்ரம் வழக்கில் வெற்றி பெறுவேன்,,,,நான் தான் அரிச்சந்திரன் அரசியலில் ,,,,,,,






.
.
.
.
.
.
.
.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அதைத் தொடர்ந்து அவர் தனது தொகுதிக்கு வந்தார். 1 ஆண்டுக்குப் பின்னர் நீலகிரி வந்த ஆ.ராசாவுக்கு ஊட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த 2009-ம் ஆண்டு நான் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட வந்தபோது எனக்கு எப்படி வரவேற்பு அளிக்கப்பட்டதோ அதே போன்று இன்றும் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. நான் மத்திய மந்திரியாக இருந்தபோது சி.பி.சி. அமைப்பு என் மீது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தது. மத்திய அரசின் தணிக்கைத்துறை என் மீது ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக தெரிவித்தது.
ஆனால் சி.பி.ஐ. ரூ.33 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் நான் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்து விட்டதாக தெரிவித்து அவதூறு பரப்பினார்கள். அடிப்படை ஆதாரம் இல்லாமல் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தேன். 2 ஜி வழக்கு அனுமான அடிப்படையிலேயே தொடரப்பட்டுள்ளது.
என் மீது போடப்பட்டுள்ள வழக்கை தி.மு.க. தலைவர் கருணாநிதி துணையுடனும், மக்கள் சக்தியுடனும், எனது சட்ட அறிவுடனும் எதிர்க்கொண்டு வெற்றிபெறுவேன். நான் நிரபராதி என்பதை விரைவில் நிரூபிப்பேன். நான் திகார் சிறையில் இருந்து கிளம்பியது முதல் சென்னை வரை பல்வேறு கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பகுதியிலும் என் மீது உள்ள வழக்கு குறித்து யாரிடமும் நான் பேசவில்லை.
என் சொந்த தொகுதி மக்களிடத்தில்தான் இதனை முதன்முதலாக கூறுகிறேன். இனி நாடு முழுவதும் இதை தெரிவிப்பேன். நீலகிரி மாவட்டத்தில் இருந்து நீதிப்பயணம் மேற்கொள்வேன். நீலகிரி மக்கள் மீது கொண்டுள்ள பாசத்தால் எனது சொந்த ஊருக்கு செல்லாமல் உங்களை காண இங்கு வந்துள்ளேன்.
மேற்கண்டவாறு ஆ.ராசா பேசினார்.

மண்டையோட்டு மாமா சீனாவிடமிருந்து எலும்புருக்கி தைலம் இறக்குமதி....கொடுமை

உலகத்தமிழர் ரிப்போர்ட் 24



June 14, 2012

.
.
.
.
.
.
.
.
இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் எச்சங்கள் எதையும் விட்டு வைக்காது அழிப்பதற்காக இவை இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
போர் முடிவுற்று மூன்றாண்டுகள் கடந்த நிலையில் மேற்படி பகுதிகளில் இன்னமும் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. இந்த நிலையிலேயே அங்கு எஞ்சியிருக்கக் கூடிய மனித புதைகுழிகளிலும் காணப்படும் எலும்பு எச்சங்களையும் உக்கச்செய்து மண்ணோடு மண்ணாக்க திட்டமிடப்படுவதாக தெரிகிறது.
அந்தப் பகுதிகளை அங்குலம் அங்குலமாக இராணுவம் தோண்டி வருகின்ற நிலையிலேயே இந்தச் செய்தியும் வெளியாகியுள்ளது. ஆயுதங்களையும் கண்ணி வெடிகளையும் மீட்பதாகக்கூறி முள்ளிவாய்க்கால் நிலப்பகுதியை சல்லடை போட்டுத் தேடும் இராணுவம் அங்கு இறுதிப் போரில் கொல்லப்பட்டோரின் எச்சங்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் ஐ.நாவோ அல்லது சுயாதீன சர்வதேச விசாரணைக்குழு ஒன்றினாலோ போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அப்பகுதிகளில் இருந்து போர்க்குற்ற ஆதாரமாக மனித எச்சங்கள் பல நூற்றுக் கணக்கில் கிடைத்து விடாமல் இருப்பதை உறுதிப் படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்காகவே சீனாவிடமிருந்து எலும்புகள் முதலான எச்சங்களை முற்றாக அழிக்கும் சக்திவாய்ந்த விசேட திரவமொன்றை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகவும், இதன் மூலம் போர்க்குற்ற ஆதாரங்களை எந்தவித தடயமுமின்றி அழித்துவிட அரசு முனைவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன......

Wednesday, June 6, 2012

1000 கோடி 50 கோடி உழல் பண்றவனை உதைச்சா சரி ஆகிடும் ,,,,,,,,

உலகத்தமிழர் நெட்வொர்க் அதிர்ச்சி தகவல் ,,,,,,?

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் ஜூஸ்


ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் ஜூஸ் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 27ம் திகதி தொடங்குகின்றது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாம் புனே, போபால், சோனேபட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.
தொடக்கத்தில் இங்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக புகார் கூறப்பட்டதையடுத்து பயிற்சி முகாம்களின் உண்மை நிலையை கண்டறிய மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இதில் இடம்பெற்றுள்ள 1986ல் நடந்த ஆசிய விளையாட்டு நீச்சலில் வெள்ளி வென்ற கஜான் சிங், அரியானாவின் சோனேபட் பயிற்சி முகாமில் திடீரென சோதனை மேற்கொண்டார்.
இங்கு கடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு அழுகிய பழத்தில் ஜூஸ் கொடுப்பது சோதனையில் அம்பலமானது.
இதுகுறித்து கஜான் சிங் கூறியதாவது: பயிற்சி முகாமில் பங்கேற்கும் வீரர்களுக்கு அழுகிய பழத்தில் ஜூஸ் கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
கிச்சன் மிகவும் அசுத்தமாக இருந்தது. உணவுப் பொருட்களின் தரத்தை மேற்பார்வையிட உணவு முறை நிபுணரோ அல்லது மருத்துவ நிபுணரோ இல்லை.
வீரரின் உணவுச் செலவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 675 வழங்க வேண்டுமென மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், சத்தான உணவு எதுவும் வழங்கப்படுவது கிடையாது.
இக்குறைகளை சுஷில் குமார் போன்ற முன்னணி வீரர் கூட எடுத்துச் சொல்ல தயங்கியது வியப்பாக உள்ளது.
குறை சொன்னால், அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட வீரர் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்படுவர். இந்த பயம் காரணமாகவே எல்லாவற்றையும் மூடி மறைக்கின்றனர்.
நான் ஆய்வு செய்த போது, “மெனு”வில் குறிப்பிடப்பட்டிருந்த உணவுகள் எதுவுமே பரிமாறப்படவில்லை. இந்த முகாமிற்கான சமையல்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கையில், பரிந்துரைத்துள்ளேன் என்று கஜான் சிங் கூறினார்.
இதுகுறித்து சோனேபட் பயிற்சி முகாமின் பொறுப்பாளர் சஞ்சீவ் சர்மா கூறுகையில், சமையல் ஒப்பந்தக்காரர் ஜெயினுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
இதில் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். நினைத்த நேரத்தில் ஒப்பந்தக்காரரை வெளியேற்ற முடியாது என்றார்.


90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார்!- பெண்கள் அமைப்பு

வெட்கமான விஷயம் ;

இலங்கையில் ஒவ்வொரு 90 நிமிடத்துக்கு இடையில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறார் எனினும் அரசியல் செல்வாக்கு நீதிக்கு தடையாக உள்ளதால் பொலிஸாரால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று சோசலிச பெண்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 
நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சுதந்திர பொருளாதாரக் கொள்கையே இதற்கான காரணம் என்று பெண்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் எந்த ஒரு விடயத்தையும் பணம் தீர்மானிக்கும் நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளதாக சோசலிச பெண்கள் சங்கத்தின் தலைவி சமன்மாலி குணசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை பெலவத்த ஜே வி பி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
பொலிஸ் அறிக்கைகளின்படி நாளொன்றுக்கு 5 பாலியல் பலாத்கார சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று கூறப்படுகிறது. எனினும் உண்மையில் நாளொன்றுக்கு 15 இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக சமன்மாலி குறிப்பிட்டார்.
1990 ஆம் ஆண்டு 665 பாலியல் பலாத்கார சம்பவங்கள் இடம்பெற்றன. எனினும் 2011 ஆம் ஆண்டு 
1636 பாலியல் பலாத்கார சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் பாதிக்கப்பட்ட 89 வீதமானோர் 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள்
உலகத்தமிழர் நெட்வொர்க் ....

காடுவெட்டி ஜெ குரு----வன்னியர் சங்கம்

Profile picture


குடிச்சா குடும்பத்தையே நடத்த முடியாது... நாட்டை எப்படி ஆள்றது?'' கடுகடுக்கிறார் "காடுவெட்டி குரு” – இந்த வாரம் ஆனந்த விகடனில் வெளிவந்த பேட்டி.

இந்த வாரம் ஆனந்த விகடனில் வெளிவந்த பேட்டி:-

“மாநாட்டுக்காக நாலு நாள் மகாபலிபுரத்துல தங்கி இருந்தேன். அங்கே பீச்ல நடக்குறதை எல்லாம் நானும் பார்த்துட்டுத்தான் இருந்தேன். சவட்டிஎடுக்கிற மொட்டை வெயில்ல யாரைப்பத்தியும் கவலைப்படாம கட்டிப்புடிச்சிட்டு மோந்துட்டு இருக்குதுங்க. இதுவாங்க காதல்? அந்தக் காலத்துலயே தமிழனுக்கு வீரமும் காதலும் இருந்ததா, இலக்கியங்கள்ல சொல்லி இருக்காங்களே. அதுதான் காதல்!'' - எடுத்த எடுப்பிலேயே ஆவேசம் காட்டுகிறார் காடுவெட்டி குரு. அவரது சொந்த கிராமமான காடுவெட்டியிலேயே நடந்தது இந்தச் சந்திப்பு.

''ஆயிரம் சமாதானம் சொல்லுங்கள்... வன்னியர் சமுதாயத்துப் பெண்களை வேறு சாதிப் பையன்கள் காதலித்துத் திருமணம் செய்தால், அவர்களின் கையை வெட்டுவேன்’ என்று நீங்கள் பேசியது சரியா?''

''காதல் திருமணமோ... கலப்புத் திருமணமோ செய்யக் கூடாதுனு நான் சொல்லவே இல்லை. அது என் கொள்கையும் கிடையாது. காதல்ங்கிற பேர்ல பொண்ணுங்களை ஏமாத்துறதைத்தான் என்னால ஏத்துக்க முடியலை. கடலூர், அரியலூர் மாவட்டங்கள்ல வசதியாக இருக்கும் வன்னியர் சாதியைச் சேர்ந்த பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவங்களைக் காதலிக்கிற மாதிரி நடிச்சுச் சீரழிச்சுடுறாங்க. ஆறு மாசம் அந்தப் புள்ளையைக் கூட வெச்சு நாசம் பண்ணிட்டு, அப்புறம் அடிச்சுத் துரத்திடுறானுங்க.அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணுங்க எங்கே போகும்? தற்கொலைதான் பண்ணிக்குதுங்க. எங்க வன்னியர் சாதிப் பொண்ணுங்களைக் குறிவெச்சு மட்டும்தான் இது நடந்துட்டே இருக்கு. கடலூர், அரியலூர் மாவட்டத்துல புள்ளைங்களைப் பெத்த எத்தனை பேரு கண்ணீரும் கம்பலையுமா நிக்கிறாங்கனு ஒரு சர்வே எடுத்துப் பாருங்க... நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைனு உங்களுக்கே தெரியும். ஏன்... அதே தெய்வீகக் காதல் ஒரு ஏழை வீட்டுப் பெண் மேல வர மாட்டேங்குது? அதான் ஒரு ஆவேசத்துல 'காதல்ங்கிற பேர்ல எங்கக் குடும்பத்துப் பொண்ணுங்களை ஏமாத்துறவங்க கையை வெட்டுங்க’னு சொன்னேன். எங்க சாதிப் பையனே அப்படி ஒரு தப்பு பண்ணி இருந்தா, அவனையும் வெட்டுங்கனுதான் சொல்றேன். ஒரு பொண்ணைப் பெத்த அப்பா ஸ்தானத்துல இருந்து பாருங்க... நான் சொல்றதோட அர்த்தமும் வலியும் புரியும்!''

''அப்போ உங்க சாதியைச் சேர்ந்த பசங்க மத்த சாதிப் பொண்ணுங்களைக் காதலிக்கிறதை ஏத்துக்குறீங்களா?''

''காட்டுமன்னார்குடி, அரியலூர் பகுதியில் எங்க சாதிப் பசங்க நிறைய பேரு தாழ்த்தப் பட்ட சமூகத்துப் பெண்களைக் காதலிச்சிக் கல்யாணம் பண்ணி இருக்காங்க. ஆனா, அவங்க யாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்தப் பெண்ணை அடிச்சுத் துரத்தினது கிடையாது. சந்தோஷமா வெச்சிக் குடும்பம் நடத்திட்டு இருக்காங்க. எங்க சுத்து வட்டாரத்துல யாராவது காதலிச்சு வீட்ல சம்மதம் கிடைக்கலைன்னா, நேரா இதே காடுவெட்டி கிராமத்துக்குத்தான் ஓடி வருவாங்க. 'காடுவெட்டி கிராமத்துக்குப் போயிட்டா, குரு அண்ணன் சேர்த்துவெச்சிடுவாரு’னு அவங்களுக்கு ஒரு நம்பிக்கை. அப்படி நானே இதுவரை ஆயிரத்துக்கும் மேல காதல் கல்யா ணங்களைச் செஞ்சிவெச்சிருக்கேன். பெத்தவங்ககிட்டயும் பேசி சமாதானப் படுத்திவெச்சிருக்கேன். உண்மையான காதல்னா, உயிரைக் கொடுத்தாவது சேர்த்துவைப்பான் இந்த குரு!''

''பா.ம.க. மீண்டும் சாதி அரசியலைக் கையில் எடுத்திருச்சே?''

''தமிழ்நாட்டுல சாதி இல்லாம என்ன நடந்திருக்கு சொல்லுங்க? இங்கே இரண்டரைக் கோடி வன்னியர்கள் இருக் கோம். ஆனா, எங்க வாழ்க்கை நிலை இன்னைக்கு வரைக்கும் உயரலையே? எங்க பாட்டன் காலத்துல விவசாய நிலக் கிழார்களா இருந்தவுங்க, இன்னைக்கு விவசாயக் கூலிகளா இருக்கோம்.எங்க உரிமைக்காக நாங்க போராடும்போது சாதியைச் சொல்லித்தான் போராட வேண்டிஇருக்குது. சாதியை ஒழிச் சிட்டோம்னு சொல்றீங்க... சரி, இன்னும் சிதம்பரம் நடராஜர் கோயில்ல நந்தன் போன வாசலை எதுக்கு மூடி வெச்சிருக்காங்க? ஸ்ரீரங்கம் பெருமாளை நாங்க போய்ப் பார்க்க எதுக்கு நடுவுல ஒரு இடைத்தரகர்? தி.மு.க., அ.தி.மு.க. ரெண்டுமே சாதி இல்லைனு சொல்லிட்டு, ஊருக்குள்ள சாதியை வளர்த்துக்கிட்டுதான் இருக்கு. 'நாங்க சாதி இருக்கு’னு சொல்லிட்டு, சாதிக் கொடுமையை ஒழிக்கப் போராடிட்டு இருக்கோம். வடநாட்டுப் பக்கம் போனா, நடிகையில இருந்து கிரிக்கெட் ஆடுறவன் வரைக்கும் அத்தனை பேரும் பேரோடு சாதியையும் சேர்த்துதான் வெச்சிருக்கான். இதெல்லாம் எப்போ மாறி, இந்தியன், தமிழன்கிற நிலை வருதோ... அப்ப நாங்க சாதியைப் பத்திப் பேசினா எங்களை வந்து கேளுங்க!''



''அப்போ 2011-ல் தமிழகத்தில் பா.ம.க-வின் ஆட்சினு சொன்னீங்க.. இப்ப என்ன... 2016-ல் அன்புமணி தமிழக முதல்வர்ங்கிறதுதான் உங்க திட்டமா?''

''கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் - அழகிரி, ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலா, விஜயகாந்துக்குப் பிறகு அவரு பொண்டாட்டினு ஆளாளுக்குச் சொல்லிட்டு இருக்காங்க. எங்க கட்சியை வழி நடத்தும் சின்னய்யாதான் அடுத்த முதல்வர்னு நாங்க சொல்றதுல என்ன தப்பு? வெள்ளைக்காரன் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டான். அப்படிப்பட்டவனே எங்க சின்னய்யா வைப் பார்த்து, எழுந்து நின்னு கை தட்டி இருக்கான். அப்படிப்பட்ட திறமை சாலியை 'முதல்வர்’னு சொல்றதில் என்ன தப்பு?''



''ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி?''

''எங்கே கோயில் திருவிழா நடந்தாலும் அங்கே ஒரு புது டாஸ்மாக் கடை திறக்கிறதுனு ஒரு புது திட்டம் கொண்டு வந்திருக்காங்க அவங்க. எல்லோரும் குடிச்சிட்டுப் போய் சாமி கும்பிடுங்கனு சொல்றாங்கபோல!

உலகத்துலயே இப்படி ஒரு கேவலம் எங்கேயும் நடக்காது. சாமி கும்பிடுற இடத்துல சாராயத்துக்கு என்னங்க வேலை? குடிகாரங்களை உருவாக்குவதில் தமிழ்நாட்டை முதல் மாநிலம் ஆக்கணும்னு திட்டம் போட்டு வேலை செய்றதைத் தான் ஜெயலலிதாவின் ஒரு வருடச் சாதனைனு சொல்ல லாம்!''

''எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்?''

''அவரு இன்னும் தெளியவே இல்லையே! தலைவருக்கு உண்டான தகுதி எதுவுமே அவருக்குக் கிடையாது. ஏதோ ஒரு அலையில மக்கள் ஓட்டுப் போட்டாங்க. ஜெயிச்சு வந்துட்டாங்க.

'நான் ஆஃப் அடிச்சேன். என் தொண்டர்கள் ஃபுல் அடிப்பாங்க. எல்லோரும் குடிப்போம்’கிங்றதுதான் அவரோட கொள்கை. எம்.ஜி.ஆர். வந்தாரு, குடிக்கச் சொன்னாரு. கலைஞரும் குடிக்கச் சொன்னாரு. ஜெயலலிதாவும் குடிக்கச் சொன்னாங்க. நாளைக்கு இவரு வந்தாருன்னா, 'என்னைப் போல எல்லோரும் நிதானம் இல்லாம குடிச்சிக்கிட்டே இருங்க’னு சொல்லு வாரு. நிதானம் இல்லாம குடிச்சிட்டே இருந்தா, குடும்பத்தையே நடத்த முடியாது. அப்புறம் எப்ப டிங்க நாட்டை ஆள முடியும்? அவரு எந்த நேரத்துல குடிக்காம இருப்பாருனு யாருக்குமே தெரியலயே. சட்டமன்றத்துக்கே அப்படித்தானே வராரு. ஏதோ வந்துட் டாரு... இதோடு அவரு அரசியல் முடிஞ்சிடும். அதனால அவரைப் பத்தி இனி பேச வேண்டியதே இல்லை!''

நன்றி:
உலகத்தமிழர் நெட்வொர்க் 

Saturday, June 2, 2012

விமானம் எப்படி பறக்கிறது தெரியுமா?


  • இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்.


  • பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்


  • சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…


  • இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது


  • ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு:


  • A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் - Lift


  • B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust


  • C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight


  • D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag


  • ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்


  • Weight=Lift


  • Drag=Thrust


  • த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்
  • டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்


  • விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்


  • விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்


  • சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,


  • அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.


  • (பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று.


  • இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)


  • விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்


  • பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது


  • ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேலிகிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்.


  • உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது


  • விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்


  • இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக?


  • இங்குதான் விஷயம் உள்ளது.  காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)


  • விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்.


  • அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்


  • இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?


  • அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)


  • இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது


  • விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?


  • அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது


  • ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான்.