Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Wednesday, June 6, 2012

90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார்!- பெண்கள் அமைப்பு

வெட்கமான விஷயம் ;

இலங்கையில் ஒவ்வொரு 90 நிமிடத்துக்கு இடையில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறார் எனினும் அரசியல் செல்வாக்கு நீதிக்கு தடையாக உள்ளதால் பொலிஸாரால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று சோசலிச பெண்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 
நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சுதந்திர பொருளாதாரக் கொள்கையே இதற்கான காரணம் என்று பெண்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் எந்த ஒரு விடயத்தையும் பணம் தீர்மானிக்கும் நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளதாக சோசலிச பெண்கள் சங்கத்தின் தலைவி சமன்மாலி குணசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை பெலவத்த ஜே வி பி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
பொலிஸ் அறிக்கைகளின்படி நாளொன்றுக்கு 5 பாலியல் பலாத்கார சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று கூறப்படுகிறது. எனினும் உண்மையில் நாளொன்றுக்கு 15 இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக சமன்மாலி குறிப்பிட்டார்.
1990 ஆம் ஆண்டு 665 பாலியல் பலாத்கார சம்பவங்கள் இடம்பெற்றன. எனினும் 2011 ஆம் ஆண்டு 
1636 பாலியல் பலாத்கார சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் பாதிக்கப்பட்ட 89 வீதமானோர் 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள்
உலகத்தமிழர் நெட்வொர்க் ....

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.