Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, June 14, 2012

மண்டையோட்டு மாமா சீனாவிடமிருந்து எலும்புருக்கி தைலம் இறக்குமதி....கொடுமை

உலகத்தமிழர் ரிப்போர்ட் 24



June 14, 2012

.
.
.
.
.
.
.
.
இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் எச்சங்கள் எதையும் விட்டு வைக்காது அழிப்பதற்காக இவை இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
போர் முடிவுற்று மூன்றாண்டுகள் கடந்த நிலையில் மேற்படி பகுதிகளில் இன்னமும் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. இந்த நிலையிலேயே அங்கு எஞ்சியிருக்கக் கூடிய மனித புதைகுழிகளிலும் காணப்படும் எலும்பு எச்சங்களையும் உக்கச்செய்து மண்ணோடு மண்ணாக்க திட்டமிடப்படுவதாக தெரிகிறது.
அந்தப் பகுதிகளை அங்குலம் அங்குலமாக இராணுவம் தோண்டி வருகின்ற நிலையிலேயே இந்தச் செய்தியும் வெளியாகியுள்ளது. ஆயுதங்களையும் கண்ணி வெடிகளையும் மீட்பதாகக்கூறி முள்ளிவாய்க்கால் நிலப்பகுதியை சல்லடை போட்டுத் தேடும் இராணுவம் அங்கு இறுதிப் போரில் கொல்லப்பட்டோரின் எச்சங்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் ஐ.நாவோ அல்லது சுயாதீன சர்வதேச விசாரணைக்குழு ஒன்றினாலோ போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அப்பகுதிகளில் இருந்து போர்க்குற்ற ஆதாரமாக மனித எச்சங்கள் பல நூற்றுக் கணக்கில் கிடைத்து விடாமல் இருப்பதை உறுதிப் படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்காகவே சீனாவிடமிருந்து எலும்புகள் முதலான எச்சங்களை முற்றாக அழிக்கும் சக்திவாய்ந்த விசேட திரவமொன்றை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகவும், இதன் மூலம் போர்க்குற்ற ஆதாரங்களை எந்தவித தடயமுமின்றி அழித்துவிட அரசு முனைவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன......

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.