பூட்டை செய்தவன் தான் சாவியையும் செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு கொண்டு வந்த அம்பேத்கர் அதை எவ்வளவு காலம், எந்தெந்த சூழலில் மாற்ற விடும் என்பன போன்ற எல்லைகளை தெளிவாக வரையறுக்காது ஓர வஞ்சனை செய்து விட்டார். அதன் காரணமாக 60 ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை சலுகைகளுக்கும் இட ஒதுக்கீடுகளுக்கும் விடிவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக 100/100 எடுத்தாலும் சில சமூகங்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கபடுவதால் சமூகங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் மிக கடுமையாக வளர்கிறது. அம்பத்கரை கொண்டாடும் அனைவரும் சுதந்திரம் அடைந்த நாளில் இருந்த (இட ஒதுக்கீடு பெறும்) இனத்தவரின் நிலையை விட இன்று நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்த ரிசர்வேசனை மறு ஆய்வுக்கு உட்படுத்தி குறைக்க வழி செய்ய வேண்டும்.
உண்மையில் அம்பேத்கர் சீர்திருத்தவாதியாக அனைவரும் கருதினால் மக்களுக்குள் வேற்றுமைக்கு காரணமாக இருக்கும் ஒருதலைபட்ச வன்கொடுமை சட்டம், பல ஆண்டுகளாக சீரமைக்கபடாத இட ஒதுக்கீடு முறை ஆகியவற்றை மறு ஆய்வு செய்து திருத்த வேண்டும்.
சரிசம வாய்ப்பு – திறமைக்கு வாய்ப்பு – அனைவருக்கும் பொதுவான சட்டம்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.