Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Tuesday, October 4, 2016

பெண்கள் பாதுகாப்பு...

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க பெண்கள் பாதுகாப்பு என்பது பெரிய கேள்விக் குறியாகவே இருக்கிறது என்பது தான் நிதர்சனம். கேலி, கிண்டல், சைகை என ‘ஈவ் டீசிங்’கில் ஆரம்பித்த அந்த கேள்விக்குறி, இப்போது அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தின் இன்டர்நெட் வரை நீண்டு கொண்டே தான் போகிறது..!நாம் நினைப்பதை விட அதிகமான பாதிப்புகளை, பெண்கள் திந்தினம் சந்திக்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சியான உண்மை. அதற்கு பலமான ஒரு ஆதாரமாய் நிற்கிறது சமீபத்தில் ஐ.நா வெளியிட்ட அறிக்கை ஒன்று..!

ஐ.நா-வின் புதிய அறிக்கை ஒன்று உலகம் முழுக்க, ஆன்லைன்னில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகின்றனர் என்று தெரிவிக்கிறது.பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் ஆன்லைன் வன்முறை, உலகம்விழித்துக்கொள்ள ஒரு குரல் (Combating Online Violence Against Women & Girls: A Worldwide Wake-Up Call) என்ற ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது ஐ.நா..!

பெண்களுக்குஎதிரான ஆன்லைன் குற்றங்களில் குறைந்த அளவிலான பாதிப்புகளை பெறும் நாடுகளில் இந்தியாவும் அடங்குகிறது. அப்படியாக இந்தியாவை பொருத்தமட்டில், 35% பெண்கள் தாங்கள் பாதிக்கப்படுவதாக புகார் அளிக்கும் அதே நேரத்தில் 46.7% பெண்கள் புகார்கள் எதுவும் அளிப்பது இல்லை என்கிறது ஐ.நா அறிக்கை.

மேலும் 18.3% இந்திய பெண்கள் தாங்கள் பாதிக்கபடுவதைக்கூட உணராமல் இருக்கின்றார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் ஐ.நா அறிக்கை அம்பலபடுத்தியுள்ளது. உறுதி அளிக்கும் வகையில், இந்தியாவையும் சேர்த்து மொத்தம் 6 நாடுகளை சேர்ந்த 67% பெண்கள் தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாக கூறியுள்ளார்களாம்.

உலகம் முழுக்க 18 முதல் 24 வயதிற்குள் உள்ள பெண்கள் தான்,பின்தொடர்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை அதிகம் சந்திக்கின்றனர் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆன்லைன் குற்றங்கள், இன்டர்நெட் சுதந்திரத்தை திசை திருப்பும் வகையில் அமைவதாகவும், பல இடங்களில் அது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான செயல்களில் ஈடுபடுவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.

ஆக பெண்களுக்கு எதிரான இது போன்ற குற்றங்களுக்கு எதிராக உலக நாடுகள் விழித்து கொண்டு, இதை தடுக்க செயல்பட வேண்டிய தருணம் வந்து விட்டது என்றும் ஐநா கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.