Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Tuesday, October 4, 2016

அழகு யார்...?

இந்த உலகம் அழகானது. அதில் நிறைய அழகான மனிதர்கள் இருக்கிறார்கள். நாம் பாதையில் நடந்து செல்லும் போதும் வைபவங்களில் பங்கேற்கும் போதும் தொலைக்காட்சி பார்க்கும் போதும் அழகான மனிதர்கள் பலரைக் காண்கிறோம். மனிதர்கள் பொதுவாகவே அழகானவர்கள். நாம் ஒவ்வொருவரும் அழகை விரும்புகிறோம்.

அழகாக இருக்க ஆசைப்படுகிறோம். அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபடும் பலரையும் காண்கிறோம். நாமும் அப்படிச் செய்ய எத்தனிக்கிறோம்.அழகை பலர் பல கோணங்களில் பார்க்கின்றனர்.

அழகான உடலைக்கொண்டவர்களைப்பார்த்து அழகானவர்கள் என்றும், அழகாக ஆடை அணிந்திருப்பவர்களைப் பார்த்துஅழகானவர்கள் என்றும் நினைப்பவர்களும் சொல்பவர்களும் அப்படி இருக்க முயற்சிப்பவர்களையும் காணத்தான் செய்கிறோம்.

மனிதர்களின் அழகு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் தென்படலாம். எப்படித் தென்பட்டாலும் எந்தக்கோணத்தில் பார்த்தாலும் மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அழகானவர்களே. ஆனால்…

• உண்மையான அழகு எப்படி வெளிப்படுகிறது?

• எப்படி அதைக் கண்டுகொள்வது?

• உண்மையான அழகுடையர்கள் யார்?என்ற வினாக்களுக்கான சரியான பதிலை நாம் கண்டிப்பாகவே தேடிப்பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். தேடி அறிந்துகொள்ள ஆசையும் காட்டுகிறோம். உண்மையான அழகு மிகவும் அரிதாகவே மனிதர்களில் இருந்து வெளிப்படுகிறது. நாம் இயல்பாகப் பெற்றவை, நாம் கற்றுக்கொண்டவை,

எமக்குள் விதைத்து வளர்த்துக்கொண்ட நல்லவைகள் போன்றவற்றின் கூட்டுச் சேர்வுதான் அழகு என்ற வடிவில் வெளிவரும் அற்புதமான மனித வெளிப்பாடாகும். அது சற்றென்று வருவதல்ல. அது ஒன்றோடு மட்டும் சம்பந்தப்பட்டதுமல்ல.‘அழகு இயல்பாகக் கிடைக்கிறது. புரிந்துகொள்வதன் மூலம் அது வளர்கிறது. வளர்த்துக்கொள்வதன் மூலம் அது அழகாக வெளிப்படுகிறது.’

அழகை அழகாக வெளிப்படுத்த வேண்டுமானால் அழகாக வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து வளர்த்துக்கொண்டிருக்கவும் வேண்டும். உண்மையான அழகு என்பது ஒருவரது சிநதனையில் இருந்து உருவாகிறது. அது அவரது நடத்தையின் மூலம் வெளிப்படுகிறது.

உண்மையான அழகிற்குச் சொந்தக்காரர்கள் பல அழகான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தக்குணங்கள்தான் அவர்கள் அழகானவர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் பயனும் பெறுமதியும் மிக்கவர்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

அழகாக வாழக்கற்று, அழகை வளர்த்து வாழ்ந்துகொண்டு வருபவர்களிடம் இருக்கும் ஒரு சில அழகான குணங்களை மட்டும் இங்கு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறோம். அவை அழகின் அரத்தத்தைப் புரிய எமக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.உண்மையான அழகு மன அமைதியினதும், மனமகிழ்ச்சியினதும் பிரகாசமாக வெளிவரும்.அழகான மனிதர்கள்,

*.எப்போதும் சந்தோசமாகவே இருக்க ஆசைப்படுவார்கள்.

*.அவர்கள் அதிகம் புன்னகைப்பார்கள்.

*.அமைதியாகவும் அழகாகவும் சிரிப்பார்கள்.

*.அவர்களில் இருந்து மகிழ்ச்சியும் உற்சாகமும் வெளிவரும்.

*.அவர்களின் புன்னகையில் அணைப்பு இருக்கும். அழைப்பும் இருக்கும்.

*.அவர்களைப்பார்க்கும் போது நாம் அவர்கள் மீது இலகுவாகவே ஈர்க்கப்பட்டுவிடுவோம்.

*.அவர்களின் தோற்றம் மற்றவர்களை வரவேற்பது போல் இருக்கும்.

*.அழகானவர்கள் முகம் கொடுக்கும் சந்தர்ப்பங்கள் எதுவாக இருப்பினும் அதை சளிக்கமாலும் முகம் சுழிக்காமலும் முகம் கொடுப்பார்கள். அவர்களில் இருந்து எட்டிப்பாயும் உள்ளார்ந்த அமைதி அவர்களது மனநிலையை மட்டுமல்ல, மற்றவர்களின் மனநிலையையும் சாந்தப்படுத்திவிடும்.

*.உண்மையான அழகுடையவர்கள் நாம் யார் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார்கள். அதாவது அவர்களுக்கு அவர்களை தெரியும். அவர்கள் வேறு எவராவது ஒருவராக வாழவே மாட்டார்கள். எதிர்பார்ப்புள்ளவர்களாகவும்,இலட்சியம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களது தகைமைகள், திறமைகள், பலம், பலவீனம் என்பன தெரியும்.

*.உண்மையான அழகுடையவர்கள் அவர்களை நன்றாகத் தெரிந்தும், புரிந்தும் வைத்திருப்பார்கள். மற்றவர்களை தெரிந்தும் புரிந்தும் கொள்வதை விட தன்னைத் தெளிவாகத் தெரிந்து வைப்பதும் புரிந்துகொள்வதுமே ஒரு தரமான மனிதனின் மிகச்சிறந்த அடையாளமாக இருக்கும். எமக்கு எம்மைத் தெரியாவிட்டால் நாம் மற்றவர்களுக்கு பல வழிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவர்களாக ஆகலாம். அழகானவர்கள். எப்பொழுதும் அவர்ளை தெரிந்து கொண்டவர்களாகவும், புரிந்து கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

*.நேர்மையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக பாடுபடுவது அழகான மனிதர்களின் பண்பாக இருக்கும். அவர்கள் ஒரு போதும் பிழையான தெரிவுகளை தெரிவு செய்ய மாட்டார்கள். மிகவும் உறுதியான உள்ளுணர்வுகளுடன் தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள். எது சரி, எது பிழை என்பதுஅவர்களுக்குத் தெரியும். அதனால் முட்டி மோதுண்டு, குற்ற உணர்வால் அவதிப்படாமல் வாழ இவை பலமான ஊன்றுகோள்களாக இருக்கும்.

*.சரியை சரியாகப் புரிவது போன்று, பிழையையும் சரியாகப் புரிந்துகொண்டால் மட்டும் தான் சரியான தீர்மானம் எடுக்கவும், முன்னேறிச் செல்லவும், சவால்களை சாதிக்கவும் முடியுமாக இருக்கும். அழகானவர்களிடம் இந்தப்பண்பு நிரப்பமாகவே இருக்கும்.‘நாங்கள் தெரிந்து வைத்திருக்கின்ற மிகவும் அழகான மனிதர்கள் எவ்வாறானவர்கள் என்றால், அவர்கள் வாழ்கைக்கு முகம் கொடுக்க முடியுமானவர்களாக இருப்பார்கள்.

*.நோவுகளையும், தடங்கல்களின் தன்மைகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.

*.இழப்புகளின் இயல்புகளை அறிந்துவைத்திருப்பார்கள்.*.கடன்பட்டு கஷ்டப்படாமல் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் அறிந்து வைத்திருப்பார்கள்.

*.அவர்களுக்கு பாராட்டுதல், அங்கீகாரம், கௌரவம் என்பன கிடைப்பதால் கருணையாலும் அமைதியாலும் ஆழமான அன்பாலும் அவர்களின் வாழ்வு அலங்காரமாகி இருக்கும்.‘அழகானவர்கள் திடீரென தோன்றக்கூடியவர்கள் அல்லர்’என பிரபல மனோதத்துவ நிபுணர் எலிசபத் ரொபர் குறிப்பிடுவதிலிருந்து இதன் உண்மையை புரிந்துகொள்ளலாம்.அழகான மனிதர்கள் தம்மைச் சுற்றியிருப்பவர்கள் மீது கணிவும் கரிசனையும் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதிலும் வாழவும் வளரவும் உதவி ஒத்துழைப்பதிலும் ஆர்வமாய் இருப்பார்கள். அவர்களது வார்த்தைகள் வளமானதாகவும், அவர்களது செயற்பாடுகள் தன்னலமற்றதாகவும் இருக்கும். அவர்களது ஒவ்வொரு வார்த்தையின் வெளிப்பாட்டிலும் அவர்களது குணத்தின் அழகைக் காணலாம்.அழகான மனிதர்கள் ஒருபோதும் அவசரப்படமாட்டார்கள். ஆவேசப்படவும்மாட்டார்கள். அமைதியும் நிதானமும் அவர்களில் நிரம்பியிருக்கும். அழகான மனிதர்கள் எப்பொழுதும் அழகானவர்கள். ஏனென்றால் அவர்கள் அவர்களைக் கவனித்துக் கொள்வார்கள். அழகாகவும் அளவாகவும் உண்பார்கள். உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். போதுமான அளவு உறங்குவார்கள். அவர்களது உடலுக்குப் பொருத்தமான ஆடைகளையே அணிவார்கள்.அழகான மனிதர்கள் எப்பொழுதும் இறைவனின் உறவில் நாட்டம் கொண்டவர்களாகவும், நம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அதனால் அவர்கள்பிழைத்துப்போக மாட்டார்கள்.உண்மையான அழகு உறுதியானது. அது ஆன்மாவின் அடித்தளத்தில் இருந்தும் வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டியெழுப்பப்பட்டதாக இருக்கும். இப்போதும் அந்தஅழகை கட்டியெழுப்பியவர்களாகவே இருந்துகொண்டிருப்பார்கள். உண்மையான அழகுக்குப் பின்னால் அறிவும் இருக்கும். ஆற்றலும் இருக்கும். அனுபவமும் இருக்கும். அர்ப்பணமும் இருக்கும்.அழகானவர்கள் எப்பொழுதும் சங்கடங்களை சந்தித்து அவற்றை அர்த்தமுள்ளதாக மாற்றியமைத்துக் கொள்வார்கள். அவர்கள் தான் அழகானவர்கள். அவர்கள் தான் வாழ்வின் பொருளை உணர்ந்துகொண்டவர்கள்.நாமும் இப்படியான அழகால் மனநிறைவு பெற்றவர்களாக, உண்மையான அழகிற்கு சொந்தக்காரர்களாக எங்களை ஆக்கிக்கொள்ளவே ஆசைப்படுவோம்.

இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது போன்ற குணங்கள் எங்களை நாம் உண்மையான அழகானவர்களாக மாற்றியமைத்துக்கொள்ளதுணைபுரியும் அழகான குணங்களாக அமையும்..

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.