Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Monday, July 16, 2012

இது வாழ்க்கை வாழ்ந்து பார் ---விக்னேஷ்


முடிவே இல்லாத பாதையில் பயணம் செய்கிறேன்....
முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்.....
உன் லட்சியம்....?

 
இது சாதாரண வார்த்தை இல்லை. வாழ்க்கையில் உயர துடிக்கும் ஒவ்வொருவர்க்கும் இது பொன் மொழி.
 
வணக்கம் நண்பர்களே... !

நீங்கள் இந்த பேஸ்புக்கில் இருப்பதன் காரணம்  என்ன?
 
நல்ல நண்பர்களை தேட என்பது உங்கள் பதிலாக இருக்கும். 

நல்ல கருத்துக்களை அறிந்து கொள்ள என்பது இன்னொரு பதிலாக இருக்கும். 

அல்லது என் எண்ணங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு வழி என்பதாக இருக்கும். 

நீங்கள் இளைஞர்கள்.  

வரும்கால இந்தியாவின் தூண்கள். 

உங்களுக்கு என்று ஆசைகள் இருக்கும், 

லெட்சியங்கள் இருக்கும், 

எதிர்காலத்தில் இப்படி வாழ வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும். அதற்காக நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறிர்கள்.

இந்த கேள்வி எதற்கு தெரியுமா? 

எண்ணங்கள் தான் மனிதனை ஆள்கின்றன என்கிறார்கள். 

உங்களுக்கு டாக்டராகணும்னு ஆசை இருக்கலாம். 

வைக்கிலாகனும்னு ஒரே முடிவில் இருக்கலாம். 

நான் பெரிய கோடிஸ்வரானாகனும் என்பது லெட்சியமாக இருக்கலாம். 

நான் பெரிய தொழில் அதிபராகனும் இப்படி எத்தனையோ கனவுகள் இருக்கலாம்.

அதை பத்தியே எந்த நேரமும் யோசியுங்க. 

நீ எதை நினைக்கிறாயோ அதாகவே மாறுவாய் என்பது தான் உண்மை. சில வேலையற்ற வெங்காயங்கள் இருக்கு.

ஆபாச படங்களை அனுப்புவது.  விடியோக்களை அனுப்புவது,  யாராவது ஒரு பெண் ஆன்லைனில் வந்து விட்டால் போதும் ஹாய் ஹாய் ஹாய் என்று மேஜெஸ் அனுப்புவதையே வாடிக்கையாக வைத்து இருப்பார்கள்.

அவர்களை பற்றி நாம் கவலை பட தேவையில்லை. அது மாதிரியான விஷ ஜந்துக்களை ஒதுக்கி புறம் தள்ளுவோம். 

அந்த மாதிரியான நபர்களை உங்கள் முக பக்கத்தில் தடை செய்யுங்கள். உங்கள் உயர்ந்த எண்ணங்களை நோக்கி நடை போடுங்கள். வாழ்க்கை என்பது ஓட்ட பந்தயம். நீங்கள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

கொஞ்சம் தாமதித்தாலும் போதும் உங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு போக ஒரு கூட்டமே காத்திருக்கிறது. 

இன்னும் விளக்கமாக சொல்லவா? 

இந்த வருடம் நீங்கள் ஒரு தேர்வு எழுதினீர்கள் என்று வைத்து கொள்வோம். உடன் எழுதியது 5 லட்சம் பேராக இருப்பார்கள். இது ஒரு தோராயமான கணக்கு. 

ஒருவேளை நீங்கள் இந்த தேர்வில் தோல்வி அடைந்தால், உங்களுக்கு முன்னால்  5 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு நீங்கள் தேர்வு எழுதும் போது இன்னொரு  5 லட்சம் பேர் போட்டியாக வந்து விடுவார்கள். ஆக பத்து லட்சம் பேரோடு நீங்க போட்டி போட வேண்டி இருக்கும்.

அதனால் ஓடுங்கள்.. உங்கள் ஆசைகளை லெட்சியங்களை தேடுங்கள். அது தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது.

இது வாழ்க்கை வாழ்ந்து பார் ---விக்னேஷ் 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.