Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Saturday, April 7, 2012

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா

என்னால் அப்படி பொங்க முடியாத தருணங்கள் சில,,,,,,,,,



* செய்திதாள்களில் மாணவன் தற்கொலை எனும் செய்தி வரும்போதெல்லாம் தன்னம்பிக்கை கொடுக்காத நம் கல்வி முறை குறித்து பேசும் போது

* அறிவியல் கண்டுபிடிப்பான இன்டர்நெட் மூலம் நல்ல நேரம் பார்த்து சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பை முடிவெடுக்கும் தெரிந்தவரை பார்க்கும் போது 


* கல்வியறிவு மற்றும் தொலைதொடர்பு குறைவாக இருந்தபோது பெண்ணின் திருமணத்திற்காக நடத்தப்பட்ட பருவமடைந்த விழா இப்போது சமூக அந்தஸ்தை வெளிக்காட்ட நடத்தப்படும்போது 


* நல்ல படித்த வேளையில் உள்ள பெண்களை திருமணம் செய்யும்போதுகூட தங்கள் அடுத்தவரிடம் பெருமை பேசவே வரதச்சினை வாங்க விரும்பும் இளைய சமுதாயத்தை பார்க்கும்போது


* சமூக வேலை என்று பெண்கள் வெளியில் வரும்போது வழியும் ஒரு சில ஆண்களை பார்க்கும் போது 


*ஆண்களின் உள்ளாடை மற்றும் வாசனை திரவியங்கள் விளம்பரத்தில் பெண்களை அரைகுறையாய் விளம்பரத்தில் காட்டும்போது


*இப்போது வரும் பல தொலைக்காட்சி தொடர்களில் இரண்டு மனைவிகள் அடுத்தவர் கணவன் அல்லது மனைவியை அடைவது போன்ற பண்பாட்டு சீரழிவுகள் தொடர்ந்து பார்க்கும் நம் சமுதாயம் அதை சார்ந்து சென்றுவிடுமோ என்று தோன்றும்பொழுது

*காதலித்து திருமணம் செய்து அதில் தோற்றவளை ஓடிப்போனவள் என ஒதுக்கும் சமூகம் காதலித்தவனை ஓடிப்போனவன் என ஒதுக்காதபோது


*எனக்கு ஆபாசம் என தோன்றும் சில விசயங்களை முகநூல் நண்பர்கள் என்னுடன் பகிரும்போது 


என்ன செய்யலாம் சொல்லுங்க?

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.