Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, June 13, 2013

கொரியாவில் பாடத்திட்டங்கள் தொழிற்சாலையின் தேவைக்கேற்ப அவ்வப்போது மாற்றியமைத்துக்கொண்டே இருக்கின்றனர்.அதனால்தான் தொழிற்துறையில் கொரியத் தயாரிப்புக்கள் சக்கைபோடு போடுகின்றன.

உலகளவில் இந்திய தொழிற்கல்வியின் எதிர்காலம்

உலக அரங்கில் இந்திய தொழில் கல்வியின் நிலை

ஜெர்மனியின் தொழிற்கல்வி உலகத்தரம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.எனவே,ஜெர்மனியின் உதவியால் இந்தியாவில் ஐ.ஐ.டிக்கள் துவக்கப்பட்டன.அதனால் தான் இந்திய ஐ.ஐ.டி.மாணவர்கள் உலகெங்கும் பிரகாசிக்கிறார்கள்.

உலக அளவில் மக்கள்தொகையில் 80% பேர்கள் தொழிற்கல்வி படிக்கின்றனர்.இந்தியாவில் வெறும் 3% பேர்கள் தான் தொழிற்கல்வி படிக்கின்றனர்.பிறகு எப்படி சர்வீஸ் மேன்கள் சுலபமாகக் கிடைப்பார்கள்?

உலக அளவில் 3000 விதமான பாடங்கள் தொழிற்கல்வியில் (ஐ.டி.ஐ) பயிற்றுவிக்கப்பட்டுவருகின்றன.ஆனால்,உலகின் ஒரே ஜனநாயகநாடும்,அதிகமான ஜனத்தொகையும் கொண்ட நமது இந்தியாவில் வெறும் 500 விதமான தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் 2/3 பங்கு மக்கள்தொகையினர் தொழிற்கல்வி கற்றுவருகின்றனர்.

கொரியாவில் பாடத்திட்டங்கள் தொழிற்சாலையின் தேவைக்கேற்ப அவ்வப்போது மாற்றியமைத்துக்கொண்டே இருக்கின்றனர்.அதனால்தான் தொழிற்துறையில் கொரியத் தயாரிப்புக்கள் சக்கைபோடு போடுகின்றன.

இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடிபேர்கள் ஆகும்.அதனால்,தனியார் நிறுவனங்கள் தொழில்நுணுக்கம் தெரிந்த ஆட்கள் இல்லாமல் திண்டாடுகின்றன.

அகில இந்திய அளவில் ஸ்டீல் உற்பத்தித் தொழிற்சாலைகள் 120% உற்பத்திக்கு முயற்சித்துவருகின்றன.இந்த உற்பத்தியை எட்டிட 80,00,000 தொழிலாளர்கள் தேவை.ஆனால்,ஓரிரு ஆண்டுகளில் அதாவது கி.பி.2013க்குள் இந்த அளவிற்கு தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம்.இதனால்,இந்தியப் பொருளாதாரம் பாதிப்படைவதோடு உலக அரங்கில் போட்டியிடும் திறன் பாதிப்பாகி,இந்தியா உலக அரங்கில் தனது பிடியை இழந்துவிடும்.இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், 35 வயதுக்குக் கீழுள்ள இந்தியர்களின் ஜனத்தொகை 77 கோடிகளாகும்.இவர்களில் நான்கில் ஒரு பங்கினர் ஐ.டி.ஐ.படிக்குமளவுக்கு தொழிற்பயிற்சிப்பள்ளிகள் இந்தியாவில் இல்லையென்பது வேதனையான உண்மை.எப்படி நாம் வல்லரசாவோம்?

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.